tamilnadu

img

சமையல் எண்ணெய் சில்லறை விற்பனைக்கு  இடைக்கால தடை!

சில்லறையாக சமையல் எண்ணெயை விற்பனை செய்ய சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை இடைக்கால தடை விதித்துள்ளது.

சட்டப்படி எண்ணெய்யை சில்லறை விற்பனை செய்யக்கூடாது. சட்ட விதிகளுக்கு உட்பட்டு தயாரிக்கப்படும் தரமான சமையல் எண்ணெய்களே விற்பனை செய்யப்படுகின்றன என்பதை உறுதி செய்ய வேண்டும். என கூறி மதுரை மேலூரை சேர்ந்த வழக்கறிஞர் அருண்நிதி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில்  பொதுநல மனு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார். 
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வு, சமையல் எண்ணெயின் தரத்தை ஆய்வு செய்வதற்காக எத்தனை ஆய்வகங்கள் உள்ளன, கடந்த 5 ஆண்டுகளில் எவ்வளவு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன, இதில் விதிகளை மீறியதாக எத்தனை வழக்குகள் உள்ளன என்ற விவரங்களை மாவட்ட வாரியாக தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.
மேலும், பேக்கிங் செய்த சமையல் எண்ணெய்களையே விற்பனை செய்ய வேண்டும். சமையல் எண்ணெயை சில்லறையாக விற்பனை செய்ய இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டு வழக்கினை ஜனவரி 18 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

;