tamilnadu

img

குழாயில் உடைப்பு: வீணாக வாய்க்காலில் கலக்கும் குடிநீர்

குழாயில் உடைப்பு: வீணாக வாய்க்காலில் கலக்கும் குடிநீர்

பாபநாசம், ஆக.13 - தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே பண்டாரவாடை ஊராட்சியைச் சேர்ந்தது கோயில் தேவராயன்பேட்டை. இந்த கிராமத்தில் மெயின் சாலையிலிருந்து ஆற்றங்கரைத் தெருவிற்கு செல்லும் சாலை உள்ளது.  இந்த சாலையோரம் கூட்டுக் குடிநீர் திட்ட பைப் செல்கிறது. இந்த பைப்பில் உடைப்பு ஏற்பட்டு, கடந்த 3 மாதத்திற்கு மேலாக குடிதண்ணீர் வெளியேறி, வீணாக வாய்க்காலில் கலக்கிறது. ஆற்றங்கரைத் தெரு அருகில் அக்கரையார் நகர் உள்ளிட்ட சில நகர்கள் உள்ளன. இதில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. குடிநீருக்காக சாலை மறியல் போராட்டங்கள் நடந்து வரும் நிலையில், குடிநீர் வீணாக வாய்க்காலில் கலப்பதை தடுக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி குடியிருப்பு வாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.