tamilnadu

img

கலவர நெருப்பைப் பற்ற வைக்க முயலும் பாஜக

சென்னை, செப்.22-  தமிழ்நாட்டில் கலவர நெருப்பை பாஜக பற்ற வைக்க முயலுகிறது.இதனை ஜனநாயக சக்திகள் ஒன்றி ணைந்து முறியடிப்போம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறைகூவல் விடுத்துள்ளது. இதுகுறித்து கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன்  வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: சமூக நல்லிணக்கத்தோடும், ஒற்றுமையோடும் மக்கள் வசிக்கும் தமிழ்நாட்டில் அரசியல் உள்நோக்கத் துடன் ஒரு கலவர நெருப்பை பற்ற  வைக்கும் வகையில் பாஜக தொட ர்ந்து செயல்பட்டு வருகிறது. திமுக  நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா அண்மையில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய பேச்சின் ஒரு பகுதியை மட்டும் திரித்து வெளியிட்டு, அதன் மூலம் மக்களிடம் ஒரு குழப்பத்தையும். பதற் றத்தையும் ஏற்படுத்தி அரசியல் ஆதா யம் தேட பாஜக முயற்சிக்கிறது. மனுஸ்மிருதியின் உள்ளடக்கம் குறித்து ஆ.ராசா பேச்சை முன்வை த்து இந்து மதம் இழிவுபடுத்தப்பட்டு விட்டதாக ஒரு கட்டுக்கதையை முன்வைத்து பாஜக பல இடங்களில் போராட்டங்கள் என்கிற பெயரில் மதவெறியை தூண்டி, தமிழகத்தை ஒரு கலவர பூமியாக மாற்றவும் முயற் சிக்கிறது. தற்போது வருகிற செப்டம்பர் 26 ஆம் தேதி தமிழகம்  முழுவதும் சிறை நிரப்பும் போராட்டம் என்று அறிவித்து தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கை சீர்குலைக்க  பாஜக  சதிசெய்து வருகிறது.

தமிழகத்தில் இந்து மதத்தினர் இழிவுபடுத்தப்படுவதாகவும், பாஜகவால்  மட்டுமே இந்து மதம் காப்பாற்றப்படுவதாகவும் அவர்கள் நடத்தி வருகிற போலி நாடகத்தின் ஒரு பகுதியே தற்போது நடைபெறும் போராட்டங்கள் ஆகும். கோவை யில் கலவரத்தை தூண்டக் கூடிய வகையிலும், மக்களிடையே மோத லை உருவாக்கும் வகையிலும் பாஜக மாவட்டத் தலைவர் வன்முறையை தூண்டும் வகையில் பேசியுள்ளார். ஆ.ராசா மீது கொலை மிரட்டலும் விடுத்துள்ளார். கோவை, காரமடையில் ஒரு உண வகத்திற்கு தந்தை பெரியார் பெயரை வைத்த காரணத்தினால் அதை  பாஜகவினர் அடித்து உடைத்துள்ள னர். சென்னையில் சிறுபான்மை இஸ் லாமிய மாணவர் ஒருவரை மறித்து குல்லாவை கழற்ற வேண்டுமென சொல்லி தாக்கப்பட்டுள்ளார். உத்தம பாளையத்தில் பள்ளிவாசலுக்கு தொழுகைக்கு சென்று வந்த சிறு பான்மை இஸ்லாமிய மாணவர்களை பள்ளிக்குச் செல்லவிடாமல் தடுத்து பாஜகவினர் தாக்கியுள்ளனர். தேனி யில் தந்தை பெரியார் பிறந்தநாளை கொண்டாடக் கூடாது என்று பிரச்சனை எழுப்பி மோதலை உருவாக்கிட பாஜக முயன்றது. இத்த கைய தொடர்ச்சியான கலவரங் களின் மூலம் ஒரு பதற்றத்தையும், மோதலையும் உருவாக்க திட்டமிட்டு வரும் பாஜகவினரின் மற்றொரு முய ற்சியாகவே ஆ.ராசாவின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து நடைபெறும் போராட்டங்களையும் கருத வேண்டி யுள்ளது.

திசைதிருப்பும் பாஜக

மோடி தலைமையிலான பாஜக அரசின் நாசகரப் பொருளாதாரக் கொள்கைகளாலும், ஜி.எஸ்.டி.  உயர்வு, வேலையின்மை, கடுமை யான விலைவாசி உயர்வு, பெட்ரோல் - டீசல், சமையல் எரிவாயு விலையேற்றம் உள்ளிட்டு பொது மக்கள் சொல்லொண்ணா துயரங்களுக்கு ஆளாகியுள்ள நிலை யில் கடும் கோபத்தில் உள்ள மக்களை பிரச்சனைகளிலிருந்து திசை திருப்பும் உள்நோக்கத்தோடுதான் இத்தகைய போராட்டங்களை பாஜக நடத்தி வருகிறது என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும். மத வேற்றுமைகளை கடந்து, சமூக நல்லிணக்கத்துடன் மக்கள் ஒற்றுமையாக வாழ்ந்து வருகிற தமிழ்நாட்டில் இத்தகைய வெறுப்பு அரசியல்   நடவடிக்கைகளை முன்னெடுப்பதன் மூலம் தனது சுயநல அரசியலை கொண்டு செல்ல  முயற்சிக்கும் பாஜக உள்ளிட்ட வகுப்புவாத சக்திகளின் நட வடிக்கைகளை தடுத்து நிறுத்த அனைத்து ஜனநாயக, மதச்சார்பற்ற சக்திகளும் ஒன்றிணைய வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி  அனைத்துத் தரப்பினருக்கும் அறை கூவல் விடுக்கிறது. தமிழக அரசும், காவல்துறையும் இத்தகைய மத நல்லிணக்கத்தை குலைத்திட மதவெறி உணர்வுகளை தூண்டும் போராட்டங்களை அனு மதிக்கக் கூடாது எனவும், அத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் மீது உறுதியான சட்ட நடவடிக்கைகளை யும் மேற்கொண்டு தமிழ்நாட்டின் அமைதியை காத்திட முன்வர வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி கேட்டுக்கொள்கிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
 

;