சென்னை, ஜூன் 15- விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிக்கு ஜூலை 10 அன்று இடைத்தேர்தல் அறி விக்கப்பட்டு உள்ளது. இதில், தேர்தல் அறி வித்த மறுநாளே மதச்சார் பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில், திமுக தனது வேட் பாளராக அன்னியூர் சிவா வை அறிவித்து, தேர்தல் பணி களை துவக்கியது. கூட்ட ணிக் கட்சியினரும் களத்தில் உற்சாகமாக வேலைசெய்ய ஆரம்பித்து விட்டனர். பாஜக கூட்டணி நீண்ட ஆலோச னைக்குப் பிறகு, பாமக போட்டியிடும் என்று கூறிவிட் டது. வேட்பாளராக சி. அன்பு மணியை பாமக அறிவித்துள் ளது. இதைத் தொடர்ந்து, பிர தான எதிர்க்கட்சியான அதி முக என்ன முடிவுவெடுக்கப் போகிறது? அக்கட்சியின் தொண் டர்களே எதிர்பார்த்து காத் திருந்தனர். இந்நிலையில், சென்னை ராயப்பேட்டை தலைமை அலுவலகத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சனிக் கிழமையன்று நிர்வாகிகளு டன் ஆலோசனை நடத்தி னார். அதற்கு பிறகு வெளியி டப்பட்ட அறிக்கையில், “விக் கிரவாண்டி தொகுதி இடைத் தேர்தலை அதிமுக புறக்க ணிக்கிறது” என்று அறிவித் துள்ளார். அதிமுக தேர்தலை கண்டு அஞ்சுகிற, பயப்படு கின்ற, அச்சப்படுகின்ற இயக் கம் அல்ல என்றும் 18.8.2009 அன்று நடைபெற்ற இளை யான்குடி, கம்பம், தொண்டா முத்தூர், பர்கூர், ஸ்ரீவைகுண் டம் ஆகிய ஐந்து சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத் தேர்தலும், 27.2.2009 அன்று நடைபெற்ற உள்ளாட்சி அமைப்பு களுக்கான இடைத்தேர்த லையும் ஜெயலலிதாவே புறக்கணித்துள்ளார் என்று எடப்பாடி பழனிசாமி என்று சால்ஜாப்பு கூறியுள்ளார். இது அக்கட்சி தொண்டர் களை ஏமாற்றமடைய செய் துள்ளது. எனினும், பாஜக - பாமக கூட்டணியோடு இருக்கும் மறைமுகக் கள்ளக் கூட்டணி காரணமாகவே எடப்பாடி பழனிசாமி அதிமுக போட்டி யிடாது என்று அறிவித்துள் ளதாகவும், அதிமுக-வின் நலனை பாஜக கூட்டணிக்கு விட்டுக் கொடுத்து விட்டதாக வும் விமர்சனங்கள் எழுந் துள்ளன.