tamilnadu

img

2 ஆயிரம் எருமைகளை தத்தெடுத்த ஆவின் நிறுவனம்

சென்னை, ஜூன் 10- ஆவின் நிறுவனம் கொழுப்  புச் சத்து நிறைந்த பால் உற்  பத்தியை மேம்படுத்துவதற் காக நாமக்கல், சேலம், ஈரோடு,  திருப்பூர், கரூர் உள்பட 12  மாவட்டங்களில் உள்ள பால்  பண்ணைகளில் இருந்து 2  ஆயிரம் எருமைக் கன்று களை தத்தெடுத்துள்ளது. மேலும் எருமை மாடுகள்  வளர்க்கும் செலவைத் தாங்க முடியாத விவசாயி களுக்கு கிராம அளவில்  தொடக்க பால் உற்பத்தியா ளர் கூட்டுறவு சங்கங்கள் மூலம் உதவி செய்யப்படும் என்றும் அறிவித்துள்ளது. தமிழகத்தில் எருமை களின் எண்ணிக்கை கடந்த 2007-ம் ஆண்டு 11.8 லட்ச மாக இருந்தது. இது 2019  கணக்கெடுப்பின்படி 5.19  லட்சமாக குறைந்து இருக்கி றது. பஞ்சாப், குஜராத் உள்  ளிட்ட மாநிலங்களில் எருமை களின் எண்ணிக்கை அதிக ரித்துள்ளது. இதனால் அந்த  மாநிலங்களில் பால் உற்  பத்தியும் மேம்பட்டு உள்ளது.  எனவே, தமிழ்நாடு புதுமை முயற்சிகள் திட்டத்தின் கீழ்  எருமைகளைத் தத்தெடுக்க  ரூ. 8.2 கோடி ஒதுக்கப்பட் டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் 6  மாத வயதுடைய பெண் எரு மைக் கன்றுகள் தேர்வு செய்யப்படும். அவற்றுக்கு குடற்புழு நீக்கம் செய்யப் பட்டு 32 மாதம் வரை கண்  காணித்து உணவு மற்றும் தாதுக் கலவைகள் வழங்கப்  படும். பால் பண்ணையாளர் களுக்கு புரோட்டீன் நிறைந்த தீவனம், தாதுக் கலவை களை 26 மாதங்களுக்கு வழங்குவதுடன் இலவச மருத்துவ சேவைகள் வழங்  கப்படும். இந்த பராமரிப்பின்  மூலம் ஒரு நாளைக்கு 1.5  கிலோ வரை எடை அதிகரிக்  கும். பின்னர் 26 முதல் 32  மாதம் வரை ஒரு நாளைக்கு 1.75 கிலோ அதிகரிக்கும். கன்றுகளின் எடையை வாரந்தோறும் ஆவின் மற்  றும் கால்நடை பராமரிப்புத் துறை மருத்துவர்கள் கண் காணிப்பார்கள். எருமை வளர்ப்பு விவசாயிகளுக்கு லாபம் தரக் கூடியதாக இருந்தாலும் செலவு மற்றும் தட்பவெப்ப நிலைகள் சந்திக்கும் பிரச்சனைகளை மனதில் கொண்டு எருமை வளர்ப்பில் ஆர்வம் காட்டு வதில்லை. இந்த புதிய திட்டத்தின் மூலம் அறிவியல் தொழில் நுட்ப முறையில் செயற்கை கருவூட்டல் மூலம்  இனப்பெருக்க நுட்பங்க ளும் செயல்படுத்தப்பட உள்ளது. இந்த திட்டத்தின் மூலம் கொழுப்பு சத்து நிறைந்த  பால் உற்பத்தி மேம்படும்.  இதுதொடர்பாக, ஆவின்  நிர்வாக இயக்குநர் எஸ். வினீத் கூறும்போது, “கன்று  வளர்ப்பு முறைகள் மற்றும்  தொழில்நுட்பங்கள் குறித்து  விவசாயிகளுக்கு பயிற்சி அளிப்  பதன் மூலம், உயர்தரபாலுக் கான முதன்மை ஆதாரமாக  விளங்கும் எருமை வளர்ப்  பில் விவசாயிகள் ஆர்வம்  காட்டுவார்கள்” என்றார்.

;