தேனி, ஜன.25- கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள சாந்தம்பாறை அருகே தோண்டிமலை தேயிலை தோட்டப்பகுதிகளுக்குள் நேற்று 5-க்கும் மேற்பட்ட யானைகள் புகுந்தன. இதனைப் பார்த்த தொழிலாளர்கள் வனத் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். அங்குவந்த வனத்துறையினர் யானை யை விரட்டும் முயற்சியில் குழுவாக ஈடுபட்ட னர். அப்போது வனஅலுவலர் சக்திவேலை ஒரு யானை தும்பிக்கையால் தூக்கி எறிந்து மிதித்து கொன்றது. பொதுமக்கள் பலரும் கூச்சலிடவே யானைகள் மெதுவாக தோட்டத்தை விட்டு வெளியேறின. சக்திவேல் உடல் சாந்தம்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப் பட்டது. யானை நடமாட்டத்தைக் கட்டுப் படுத்தக் கோரி தோண்டிமலை சாலையில் பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடு பட்டனர். உடும்பஞ்சாலை, தேவிகுளம் எம்எல்ஏ.க்கள் எம்எம்.மணி, ராஜா, ஹைரேஞ்ச் முதன்மை வன பாதுகாவலர் அருண் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தையில் ஈடு பட்டனர். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதைத் தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.