tamilnadu

img

தில்லியில் பேட்டரி தொழிற்சாலையில் தீ விபத்து

தில்லியில் பேட்டரி தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 பேர் சிக்கி உள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. 
தில்லி பிராகரி பகுதியில் உள்ள பேட்டரி தொழிற்சாலையில் இன்று காலை தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் கட்டிடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ள கட்டிட இடிபாடுகளில் 10க்கும் மேற்பட்டோர் சிக்கி உள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
 

;