tamilnadu

img

பணி நிரந்தரம் செய்திடக்கோரி பிஆர்டிசி ஊழியர்கள் போராட்டம்

புதுச்சேரி அரசின் பிஆர்டிசி போக்குவரத்து கழகத்தில் 9 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றும் ஒப்பந்த ஊழியர்களை பணி நிரந்தரம் செய்திடக் கோரி, புதிய பேருந்து நிலையம் பின்புறம் உள்ள பிஆர்டிசி பணிமனை முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அரசு ஊழியர் சங்கங்களின் சம்மேளன பொதுச் செயலாளர் ராதாகிருஷ்ணன், நிர்வாகிகள் ஞானசேகர், நமச்சிவாயம் உட்பட திரளான போக்குவரத்து ஊழியர்கள் போராட்டத்தில் பங்கேற்றனர்.