tamilnadu

img

புதுக்கோட்டையில் வாலிபர் சங்க ரத்ததான முகாம்

புதுக்கோட்டை, நவ.3- இந்திய ஜனநாயக வாலிபர் சங் கத்தின் 39-ஆம் ஆண்டு அமைப்பு தினத்தை முன்னிட்டு புதுக்கோட்டை இராணியார் அரசு உயர்நிலைப் பள்ளியில் ஞாயிற்றுக்கிழமையன்று ரத்தரதான முகாம் நடைபெற்றது. முகா மிற்கு வாலிபர் சங்க நகரத் தலைவர் எஸ்.விக்கி தலைமை வகித்தார். முகாமை தொடங்கி வைத்து மாவட்டச் செயலாளர் துரை.நாராயணன் உரை யாற்றினார். புதுக்கோட்டை ரத்த வங்கி மருத்துவ அலுவலர் டாக்டர் சி.அமேஷ்பாபு உள்ளிட்ட மருத்துவக் குழுவினர் 50-க்கும் மேற்பட்ட வர்களுக்கு பரிசோதனை செய்தனர். அதில் ரத்ததானம் வழங்க உடல் தகுதி யுள்ள 31 பேரிடமிருந்து  31 யூனிட் ரத்தத்தை தானமாகப் பெற்றனர். வாலிபர் சங்கத்தின் முன்னாள் மாவட்டத் தலைவர் எஸ்.ஆர்.எம்.ராஜா, சிவகாமி அம்மாள் ரத்ததான கழக நிர்வாகி மூர்த்தி, அறிவியல் இயக்க மாநிலச் செயலாளர் எஸ்.டி. பாலகிருஷ்ணன், மருந்துப் பிரதிநிதி கள் சங்க நிர்வாகி ஆர்.முத்துக்குமார் மற்றும் வாலிபர் சங்க நிர்வாகிகள் பி. அருண், டி.திவ்யா, எம்.விஷாலினி, இந்திய மாணவர் சங்க நிர்வாகிகள் எஸ்.ஜனார்தனன், பாலா உள்ளிட் டோர் வாழ்த்திப் பேசினர்.