tamilnadu

img

சேலம் விபத்து: உயிரிழந்தவர்களுக்கு ரூ.2 லட்சம் நிதியுதவி!

சேலம் விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

சேலம் மாவட்டம், வலசையூர் அருகே சுக்கம்பட்டி கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி எதிரில் இன்று காலை, அரூரில் இருந்து சேலம் நோக்கி சென்ற லாரியின் பின்னால் இரண்டு இருசக்கர வாகனங்களில் சிலர் சென்றுகொண்டிருந்தனர். அப்போது, பின்னால் வேகமாக வந்த தனியார் பேருந்து எதிர்பாராதவிதமாக இருசக்கர வாகனங்கள் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியது. இவ்விபத்தில் 5 பேர் உயிரிழந்த நிலையில், 8 பேர் படுகாயமடைந்தனர். அவர்களை மீட்ட அக்கப்பக்கத்தினர், அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இந்த நிலையில், இவ்விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், அவர்களது உறவினர்களுக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துள்ளார். மேலும்  உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சமும்,, பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ரூ.1 லட்சமும், லேசான காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.5 ஆயிரமும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து நிதியுதவி வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.