சென்னை, ஜூன் 11- விழுப்புரம் மாவட்டம், விக்கிர வாண்டி சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தலில் திமுக சார்பில் அன்னியூர் சிவா (எ) சிவசண்முகம் வேட்பாள ராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் விக்கிர வாண்டி சட்டமன்றத் தொகுதி எம்எல்ஏவாக இருந்த நா. புகழேந்தி, உடல்நலக்குறைவு காரணமாக கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ஏப்ரல் 6-ஆம் தேதி காலமானார்.
இதனால் விக்கிரவாண்டி தொகுதி காலியாக இருப்பதாக அறிவித்த இந்திய தேர்தல் ஆணையம், இத்தொகுதிக்கு ஜூலை 10-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும், வேட்புமனுத் தாக்கல் ஜூன் 14 அன்று துவங்கும் என்று திங்களன்று அறிவிப்பு வெளியிட்டது.
இதையடுத்து, அண்ணா அறிவால யத்தில் விக்கிரவாண்டி தொகுதி இடைத் தேர்தல் தொடர்பாக திமுக தலைவரும், முதல்வருமான மு.க. ஸ்டாலின் தலைமை யிலான ஆலோசனைக்குப் பின், திமுக பொதுச்செயலாளர் க. துரைமுருகன் செய்தி க்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், “வருகிற 10-07-2024 அன்று நடைபெற உள்ள விக்கிர வாண்டி சட்டப்பேரவைத் தொகுதி இடைத் தேர்தலில், தோழமைக் கட்சி கள் ஆதரவுடன் கழக வேட்பாள ராக, அன்னியூர் சிவா (விவசாயத் தொழிலாளர் அணிச் செயலாளர்) அவர்கள் போட்டியிடுவார்.” என தெரிவிக்கப் பட்டுள்ளது.
அன்னியூர் சிவா 1971 ஏப்ரல் 3 அன்று பிறந்தவர். பி.ஏ. பட்டதாரி ஆவார். 1987 ஆம் ஆண்டு திமுகவில் இணைந்து, 1989-இல் இளைஞர் அணி துணை அமைப்பாளராக வும், 1996-இல் அன்னியூர் கூட்டுறவு வங்கித் தலைவராகவும் தேர்வு செய்யப்பட்டவர். இவருக்கு வனிதா என்ற மனைவியும், அர்ஷிதா சுடர் என்ற மகளும், திரிலோக் ஹரி என்ற மகனும் உள்ளனர்.
அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் இன்னும் வேட்பாளர் தொடர்பான ஆலோச னையையே துவங்காத நிலையில், தேர்தல் தேதி அறிவித்த மறுநாளே வேட்பாளரை அறிவித்து திமுக முதல் கட்சியாக தேர்தல் பணியை துவங்கியுள்ளது.