விழுப்புரம் , ஜூன் 20- விக்கிரவாண்டி இடைத் தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் சிவாவை ஆதரித்து மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்டு கட்சி சார்பில் 100 இடங்களில் தெருமுனைப் பிரச்சாரம் செய்வது என தீர்மானிக்கப்பட்டுள்ளது. விழுப்புரத்தில் சிபிஎம் மாவட்டக்குழு சார்பில் புதன்கிழமை விக்கிர வாண்டி இடைத்தேர்தல் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜி.ராஜேந்திரன் தலைமை தாங்கினார், கூட்டத்தில் சிபிஎம் மாநில செயற்குழு உறுப்பினர் டி.ரவீந்திரன், மாவட்டச் செயலாளர் என்.சுப்பிரமணியன், மாவட்ட செயற்குழு உறுப் பினர்கள் பி.குமார், வி.ராதா கிருஷ்ணன், எஸ்.முத்துக் குமரன்,ஏ.சங்கரன், ஆர்.மூர்த்தி, எஸ்.கீதா உட்பட பலர் கலந்து கொண்டனர். மாவட்டச் செயலாளர் என்.சுப்பிரமணியன் தலை மையில் 55- பேர் கொண்ட தேர்தல் பணிக்குழு அமைக்கப்பட்டது.