தமிழ்நாட்டில் உள்ள 300 ரேஷன் கடைகளில், கிலோ 60 ரூபாய்க்கு தக்காளி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
கடந்த ஒரு மாதங்களாக இந்தியா முழுவதும் தக்காளி விலை விண்ணைத்தொடும் அளவுக்கு உயர்ந்து வருகிறது. இதனால் நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். கோயம்பேடு சந்தையில் மொத்த விற்பனைக்கு தக்காளி ஒரு கிலோ ரூ.130க்கு மேல் விற்பனை செய்யப்படும் நிலையில், சில்லறை விற்பனை கடைகளிலும் அதிக விலைக்கு விற்கப்படுகிறது. தக்காளி விலையை கட்டுப்படுத்தும் நோக்கில், தமிழ்நாடு அரசின் உத்தரவின் பேரில் முதற்கட்டமாக சென்னையில் 85 ரேஷன் கடைகளில், தக்காளி கிலோ 60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இதன் அடுத்தகட்டமாக, தமிழ்நாட்டில் உள்ள 300 ரேஷன் கடைகளில், கிலோ 60 ரூபாய்க்கு தக்காளி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.