“இன்று முடிவு வெளியாகும் சூழலில், எனக்கு தெரியும்.. உனக்கு தெரியும்.. என்று கூறுவது தேவையில்லாத கருத்துகள். ஆனால் ஒன்றை மட்டும் சொல்ல விரும்புகிறேன். எக்ஸிட் போல் முடிவுகள் கொஞ்சம் நம்பும்படியாக இல்லை. சில எக்ஸிட் போல் முடிவுகளில் போட்டியிட்டதற்கும் அதிக தொகுதிகளில் பாஜக வெற்றிபெறும் என்று கூறியுள்ளனர். யாரோ சொன்ன கட்டளைக்கு ஏற்ப கருத்துக் கணிப்புகளை வெளியிட்டுள்ளனர். அந்த நம்பருக்கும் இன்று வெளியாகும் முடிவுகளுக்கும் பெரிய வித்தியாசம் இருக்கும்!” என்று தமிழக தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.