சென்னை, ஜூன் 22- மாற்றுத் திறனாளி களுக்கு ஹெலன் கெல்லர் பெயரில் விருது வழங்கப் படும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மீதான மானியக் கோரிக்கை மீது முதலமைச் சர் மு.க. ஸ்டாலின் வெளி யிட்டுள்ள அறிவிப்புகள் வரு மாறு:
ஆராய்ச்சி படிப்பு மேற் கொள்ளும் மாற்றுத்திறன் மாணவர்களுக்கு ஆண்டு தோறும் ரூ. 1 லட்சம் வீதம் 50 மாணவர்கள் பயன்பெறும் வகையில் ரூ. 50 லட்சம் நிதி ஒதுக்கீட்டில் ‘முதலமைச்ச ரின் ஆராய்ச்சி உதவித்தொகை திட்டம்’ செயல்படுத்தப்படும்.
மாற்றுத் திறனாளி களுக்கு வழங்கப்படும் பரா மரிப்பு உதவி தொகை ரூ. 2000, 40 சதவீதத்திற்கு மேல் பாதிப்படைந்த புற உலக சிந்தனையற்ற மதி இறுக்க முடைய மாற்றுத் திறனாளி களும் பயனடையும் வகை யில் கூடுதலாக நிதி ஒதுக்கி விரிவுபடுத்தப்படும்.
உலக மாற்றுத் திறனாளி கள் தினத்தன்று, மாற்றுத் திற னாளி மாணவர்களுக்கு கல்வி அளிக்கும் சிறந்த ஆசிரியர்களுக்கு வழங்கப் படும் மாநில விருது இனி ‘ஹெலன் கெல்லர்’ விருது என அழைக்கப்படும்.
செவித்திறன் மாற்றுத் திறனாளி மாணவர்களுக் காக செயல்படும் 10 அரசு சிறப்பு பள்ளிகளில் பாடத்திட் டம் முழுவதையும் சைகை மொழியில் தயாரித்து எதிர் வினை குறியீடு (QR Code) மூலம் அறிந்துகொள்ளும் வகையில் முதற்கட்டமாக முதல் வகுப்பு மாணவர் களுக்கு அறிமுகப்படுத்தப் படும். மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு மாதந் தோறும் வழங்கப்படும் உண வூட்டு மானிய உதவித் தொகை ரூ. 1,200-லிருந்து ரூ. 1,400 ஆக உயர்த்தி வழங்கப் படும்.
பார்வைத் திறன் குறை பாடுடைய அரசுப் பள்ளி மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்த கற்பிக் கும் கருவிகள் மற்றும் தொட் டுணரக் கூடிய புத்தகங்கள் அடங்கிய பெட்டி ரூ. 5 ஆயி ரம் முதல் ரூ. 10 ஆயிரம் மதிப் பில் வழங்கப்படும். அறிவு சார் குறைபாடு மற்றும் அறி வுசார் குறைபாடுடன் கூடிய மூளை முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்ட குழந்தை களுக்கு நவீன இயன்முறை உபகரணம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும்.
தமிழ்நாடு அரசுப் பணி யாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் துறை தேர்வு களை முதல் மூன்று முறை எழுதியும் தேர்ச்சி பெறாத 50 வயதினைக் கடந்த பார் வைத்திறன் பாதிப்பு, செவித் திறன் பாதிப்பு, கற்றல் குறை பாடு, அறிவுசார் குறைபாடு மற்றும் புற உலக சிந்தனை யற்ற மாற்றுத் திறனாளி அரசு பணியாளர்களுக்கு மீண்டும் துறைத்தேர்வு எழுதுவதிலி ருந்து விலக்களிக்கப்படும்.
பழுதடைந்த வாக னங்களுக்குப் பதிலாக புதிய இணைப்புச் சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்கள் வழங்கப்படும். அரசு போட்டித் தேர்வுகளில் கலந்து கொள்ள மாற்றுத் திறனாளிகளை ஊக்கு விக்கும் பொருட்டு உணவு மற்றும் தங்கும் விடுதி வசதி யுடன் கூடிய சிறப்பு பயிற்சி வகுப்புகள் முதற்கட்டமாக சென்னையில் துவங்கப் படும்.
இவ்வாறு முதல்வர் அறி விப்புக்களை வெளியிட்டுள் ளார்.