tamilnadu

img

குழந்தைகள், ஓபன் செஸ் போட்டி: வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு

சென்னை, மே 20- கோபா செஸ் அகாடமி சார்பில் 2024 ஆம் ஆண்டு க்கான மாநில அளவிலான குழந்தைகள் மற்றும் ஓபன் செஸ் போட்டிகள்  மே 19 அன்று சென்னை நேரு விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.

இந்த மெகா செஸ் போட்டியில் தமிழகம் முழுவதும் இருந்து 902 வீரர் கள் பங்கேற்றனர்.  இந்த போட்டிகள் 7, 9, 11, 13, 15 மற்றும்  17 வயது கொண்ட ஆண்கள், பெண்கள் கலந்து கொண்டனர். ஓபன் பிரிவில் முதல் 5 இடங்களை பிடித்தவர் ர்களுக்கு மொத்தம் ரூ. 25 ஆயிரம் ரொக்கப் பரிசு மற்றும் கோப்பைகள் வழங்கப்பட்டது.

அதே போல், மற்ற பிரிவுகளில் முதல் 10 இடங்களைப் பிடித் தவர்களுக்கு கோப்பைகள் வழங்கப்பட்டன. மேலும், இளையோர், சிறுவர் மற்றும் சிறுமிகளுக்கு முறையே சிறப்பு கோப்பைகள் வழங்க ப்பட்டன.  11 முதல் 20 ஆம் வகுப்புகள் வரை முடித்த வர்களுக்கு சிறப்பு பரிசுப் பதக்கங்களும் வழங்கப்பட்டது.

;