tamilnadu

பாரிமுனை காளிகாம்பாள் கோவில் பூசாரி ஜாமீன் மனு தாக்கல்

சென்னை,மே 29- சென்னை சாலிகிராமத்தை சேர்ந்த தனியார் தொலைக்காட்சி பெண் ஊழியர் ஒருவர் பாரிமுனையில் உள்ள கோவில் பூசாரி கார்த்திக் முனுசாமி மீது பாலியல் புகார் அளித்திருந்தார்.

இது தொடர்பாக விருகம்பாக்கம் மகளிர் போலீசார் பூசாரி கார்த்திக் முனுசாமி மீது பாலியல் வன்கொடுமை தடுப்பு சட்டம் உட்பட 6 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு விசாரணை நடத்தி வந்த னர்.  இதையடுத்து பூசாரியை கோவில் நிர்வாகம் சஸ்பெண்ட் செய்தது.தலை மறைவான அவரை போலீசார் தேடி வந்தனர்.

மேலும் அவர் வெளி நாட்டிற்கு தப்பிச் செல்லாமல் இருக்க லுக் அவுட் நோட்டீஸ் வழங்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் கொடைக்கானல் தலை மறைவாக இருந்த பூசாரி கார்த்திக் முனு சாமியை போலீசார் கைது செய்தனர்.

பூசாரி கார்த்திக் முனுசாமி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் , தனக்கு ஜாமீன் வழங்க கோரி பூசாரி கார்த்திக் முனுசாமி சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். தனக்கு எதிராக புகார் அளித்த பெண்ணிடம் சமரசம் ஏற்பட்டு ள்ளது உடனடியாக ஜாமீன் வழங்க வேண்டும் என மனுவில் கார்த்திக் முனுசாமி தெரிவித்துள்ளார்.