tamilnadu

img

ராஜேஷ் தாஸ் மீது மேலும் ஒரு வழக்குப் பதிவு!

முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் மீது அவரது முன்னாள் மனைவி பீலா வெங்கடேஷ் அளித்த புகாரின் பேரில் 5 பிரிவுகளில் காவல்துறையினர் வழக்கு.
பெண் எஸ்.பிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் தண்டனை பெற்ற முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸை கைது செய்ய உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது. இதை அடுத்து, கேளம்பாக்கம் தையூரில் உள்ள தனது பண்ணை வீட்டில் அத்துமீறி நுழைந்து காவலாளியை ராஜேஷ் தாஸ் தாக்க முயன்றதாக அவரது முன்னாள் மனைவி பீலா வெங்கடேஷ் புகார் அளித்துள்ளார். இந்த நிலையில், ராஜேஷ் தாஸ் மீது கொலை மிரட்டல், அத்துமீறி நுழைதல், தாக்குதல் உள்ளிட்ட  5 பிரிவுகளில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
 

;