திருப்பூர், மே 16 - உடுமலை தலித் சிறுமிகள் மீதான பாலியல் வன்முறை வழக்கில் உரிய மேல் நடவடிக்கை எடுக்க வும், இதுபோன்ற குற்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கவும் தேவை யான நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது. இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்டச் செயலாளர் செ.முத்துக் கண்ணன், திருப்பூர் மாவட்ட ஆட்சி யர் த.கிறிஸ்துராஜை சந்தித்து அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: உடுமலையில் இரண்டு தலித் சிறுமிகள் மீது 9 பேர் பாலியல் கூட்டு வன்புணர்வில் ஈடுபட்ட குற்றத்திற்கு காவல் துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மாவட்ட நிர்வாகத்தின் உடனடி தலையீடு காரணமாக வேகமாக குற்றவாளிகள் மீது போக்சோ பிரிவின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அத்துடன் பாதிக்கப்பட்டவர்கள் தலித் சிறுமிகளாக உள்ளதால் எஸ்சி/எஸ்டி பிரிவின் கீழும் கூடுதலாக வழக்குகள் பதியப்பட்டுள்ளன. அந்த சட்டப்பிரிவின்படி பாதிக்கப்பட்ட வர்களுக்கு வழங்க வேண்டிய நிவாரணத் தொகையை விரைந்து வழங்க வேண்டும். திருப்பூர் மாவட்டத்தில் இது போன்று வழக்குகள் வந்த வண்ணம் உள்ளன. கடந்த ஒரிரு மாதங்களுக்கு முன்பு தாராபுரத்தில் ஒரு தலித் சிறுமி பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு மருத்துவமனைக்கு சென்று மருத்துவ சிகிச்சைக்கு பின் குற்றவாளி குறித்த தகவல்கள் வெளி யாகின. தற்போது உடுமலையில் இரண்டு சிறுமிகள் பாதிக்கப்பட்ட சம்பவம் வெளிவந்திருக்கும் சமயம், காங்கயத்தில் இதே போன்று ஒரு சம்பவம் நடைபெற்ற தகவல் வெளியாகியுள்ளது. அனைத்தும் மருத்துவமனையில் இருந்து தகவல் சொல்லப்பட்டு பின் குற்றவாளிகள் மீது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. உள்ளூர் காவல் நிலையங்களில் உடனடி யாக நடவடிக்கை எடுக்க தயக்கம் காட்டுகின்றனர். இதன் மீது காவல்துறை உடனுக்குடன் உரிய நடவடிக்கை மேற்கொள்வதை மாவட்ட நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும். இந்த சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகள் அனை வரும் போதை பொருட்களை பயன்படுத்தி யுள்ளது, பத்திரிக்கை செய்திகள் மூலம் அறியப்படுகிறது. குற்றவாளிகள் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பி செல்லாதவாறு காவல்துறை மற்றும் அரசு தரப்பு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். பாதிக்கப் படும் குழந்தைகள் உரிய தகவல் களை சொல்வதற்கு உதவி மைய எண்களை கல்வி நிறுவனங்கள், பொது மக்கள் கூடும் இடங்களில் விளம்பரப் படுத்துவதை உறுதி செய்ய வேண்டும். போக்சோ சட்ட பிரிவில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து சொல்லப்பட்டுள்ள அனைத்து வழிகாட்டும் நெறி முறைகளையும் அரசு அலுவல கங்கள், மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்கள், பொதுமக்கள் கூடும் மையங்களில் நிரந்தரமாக இருக்கும் வகையில் விளம்பரங்கள் செய்ய வேண்டும். வருவாய், உள்ளாட்சி, காவல் துறை நிர்வாகங்களை முழுமையாக இதற்கு பயன்படுத்த வேண்டும். வாய்ப்புள்ள தன்னார்வ அமைப்புகள் உள்ளிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி களை மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர், மாவட்ட முதன்மை நீதிபதி, காவல் ஆணையர் உள்பட கல்வி நிறு வனங்களில் விழிப்புணர்வை ஏற்படுத்துவது குற்ற செயல்களை தடுக்க உதவிடும். இதுவரை மாவட்ட அளவில் போக்சோ சட்ட வழி காட்டுதல்கள் எந்த அளவிற்கு அமலாக்கப்பட்டுள்ளது என்பதை மாவட்ட நிர்வாகம் முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும். பாதிக்கப் பட்ட பெண் குழந்தைகளை போக்சோ சட்டத்தின் படி விசாரிக்கும் அதி காரிகள் உரிய வழிகாட்டுதல் படி செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும். சீருடை அல்லாத உடை யில் சென்று குழந்தைகளிடம் விசா ரணை மேற்கொள்வது, காவல் நிலை யங்களுக்கு அழைத்து செல்லாமல் குழந்தைகள் நல மையத்தில் வைத்து விசாரிப்பது போன்றவற்றை உறுதி செய்ய வேண்டும். உளவியல் ரீதியாக மனநல சிகிச்சை அளிப்பதை உடனடியாக மேற்கொள்ள வேண்டும். மேற்படி உடுமலை சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சிறுமிகளின் எதிர்காலத்தினை கருத்தில் கொண்டு அவர்களின் படிப்பு மற்றும் பாதுகாப்பிற்கு சிறப்பு ஏற்பாடுகளையும், அதற்கான நிதியை அரசிடம் பெற்று வழங்குவதையும் உறுதி செய்ய வேண்டும். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கஞ்சா உட்பட போதை வஸ்துகள் அவ்வப்போது காவல் துறையால் கைப்பற்றப்படுவதாக நாளிதழ்களில் வந்த வண்ணம் உள்ளது. முழுமை யாக இதனை தடை செய்ய உரிய நட வடிக்கைகளை காவல்துறை மேற்கொள்ள வேண்டும். இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் எதிர்காலத்தில் இதுபோன்ற குற்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுத்து நிறுத்தலாம் என அதில் தெரி விக்கப்பட்டுள்ளது.