tamilnadu

img

மக்களவை தேர்தல் வாக்கு எண்ணும் மையங்களில் ஆணையர் ஆய்வு

சென்னை, ஜூன் 2 - சென்னை மாவட்டத்திற்குட்பட்ட 3 மக்களவைத் தொகுதி வாக்கு எண்ணும் மையங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடுகளை மாவட்ட தேர்தல் அலுவலர் ஜெ.ராதாகிருஷ்ணன் ஞாயிறன்று  (ஜூன் 2) ஆய்வு செய்தார். 18வது மக்களவைத் தேர்தல் வாக்குகள் செவ்வாயன்று (ஜூன் 4) எண்ணப்பட  உள்ளது.

சென்னை மாவட்டத்திற்குட்பட்ட தென் சென்னை தொகுதியில் பதிவான வாக்குகள் அண்ணா பல்கலைக்கழக வளா கத்தில், மத்திய சென்னை தொகுதி வாக்குகள் லயோலா கல்லூரி வளாகத்தில், வடசென்னை தொகுதி வாக்குகள் ராணி மேரி கல்லூரியில் எண்ணப்பட உள்ளது. இந்த வாக்கு எண்ணும் மையங்களில் செய்யப்பட்டுள்ள முன்னேற்பாட்டு பணிகள், தபால் வாக்குகள் எண்ணும் அறை, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் வாக்கு எண்ணும் பகுதி, ஊடக மையம் இடங்களை ஜெ.ராதா கிருஷ்ணன் ஆய்வு செய்தார்.

குடிநீர், கழிப்பறை,மின்வசதி, அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கான உணவு ஏற்பாடுகள், பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் வாகன நிறுத்த இடங்கள் போன்ற வற்றையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

;