tamilnadu

“கலைஞர் நூற்றாண்டு நிறைவு மலர்” ஜூன் 3 முதலமைச்சர் வெளியீடுகிறார்

சென்னை, மே 29- முன்னாள் முதலமைச்சர் கருணா நிதியின் ‘கலைஞர் நூற்றாண்டு நிறைவு மலர் 2024’ திமுக தலைவரும், முதல மைச்சருமான மு.க.ஸ்டாலின் ஜூன் 3  ஆம் தேதி வெளியிடுகிறார்.

வருகிற ஜூன் 3ஆம் தேதி, முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு நிறைவு விழா, தமிழகம் முழுவதும் சிறப்பாக கொண்டாட திட்ட மிடப்பட்டுள்ளது. முன்னதாக ஜூன் 1 ஆம் தேதி, தில்லியில் உள்ள அறிவால யத்தில் கருணாநிதியின் உருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடக்க உள்ள தாகவும், தொடர்ந்து சென்னையில் உள்ள அறிவாலயத்தில், கருணாநிதி யின் சிலைக்கு மாலை அணிவித்து,

பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியும், புகழஞ்சலி செலுத்தும் கூட்டமும் நடத்தப்பட உள்ள தாக கூறப்படுகிறது. அதன்பிறகு, சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கம், கலை வாணர் அரங்கத்தில் கூட்டம் நடத்த வேண்டும் என்றால், தேர்தல் ஆணை யம் அனுமதி பெற வேண்டும் என்பதால், அறிவாலயம் அல்லது நந்தனம் ஒய்.எம்.சி.ஏ., மைதானத்தில் நடத்த லாமா என ஆலோசிக்கப் பட்டுள்ளது. அங்கு நடக்கும் விழாவுக்கு, ‘இந்தியா’  கூட்டணி கட்சிகளின் தலைவர்களை அழைக்க, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திட்டமிட்டுள்ளார். அதற்கான அழைப்புகள் விடப்பட்டுள்ளது கூறப்படுகிறது.