tamilnadu

இடைநிலை ஆசிரியர் தேர்வு தேதி மாற்றம்

சென்னை, ஜூன் 11- ஜூன் மாத இறுதியில் நடைபெற இருந்த இடைநிலை ஆசிரியர் தேர்வு தேதி மாற்றப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் ஆசிரி யராக வேண்டும் என்றால் இரண்டு தேர்வு களை எழுத வேண்டும். முதலில் டெட் எனப்படும் ஆசிரியர் தகுதி தேர்வு. இது அடிப்படையான தேர்வு. தொடக்கப் பள்ளிகளுக்கு தனியாகவும், நடுநிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகளுக்கு தனியாகவும் தாள் ஒன்று, தாள் இரண்டு என நடத்தப்படுகிறது.

இதில் தேர்ச்சி பெற்று விட்டால் அதற்குரிய சான்றிதழ் வழங்கப்படும். அது வாழ்நாள் முழுவதும் செல்லு படியாகும். இதை அடிப்படை தகுதியாக வைத்து கொண்டு அடுத்து போட்டி தேர்வாக வேண்டும். இதில் கட் ஆஃப் அடிப்படையில் தேர்ச்சி பெற்றால் வேலை தேடி வரும். தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறை எத்தனை காலிப் பணி யிடங்கள் இருக்கின்றனவோ அதற்கேற்ப ஆட்களை தேர்வு செய்யும்.

அந்த வகையில் 2024ஆம் ஆண்டிற்கான SGT எனப்படும் இடைநிலை ஆசிரியர் தேர்வு ஜூன் 23ஆம் தேதி நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதில் தேர்ச்சி பெறும் பட்சத்தில் நேர்காணல் நடத்தி சான்றிதழ் சரிபார்க்கப்பட்டு பணி ஆணை வழங்கப்படும். இதற்காக பலரும் ஆர்வத்துடன் தயாராகி வந்தனர்.

இந்நிலையில் ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், நிர்வாக காரணங்களுக்காக இடைநிலை ஆசிரியர் தேர்வு ஒத்தி வைக்கப்படுகிறது. இந்த தேர்வு மீண்டும் ஜூலை 27 அன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கேற்ப தேர்விற்கு தயாராகுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.