சென்னை, செப். 25 - தமிழகத்தில் என்கவுண்ட்டர் படுகொலைகள் அதிகமாகி வரு வதற்கு, மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி தனது கண்ட னத்தைத் தெரிவித்துள்ளது.
கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் இதுதொடர்பாக வெளியிட் டுள்ள அறிக்கையில் கூறி யிருப்பதாவது:
என்கவுண்ட்டர்கள் தற்செயலானவை அல்ல!
தமிழ்நாட்டில் என்கவுண்ட்டர் படு கொலைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரு கின்றன. சென்னையில் மட்டும் கடந்த இரண்டு மாதங்களில் 3பேர் என்கவுண்ட்டரால் கொல்லப்பட்டுள்ளனர். இது தற்செயலான தல்ல.
நீதிமன்றங்களால் வழங்கப்படும் மரண தண்டனைகளையே ஒழிக்க வேண்டு மென உலகம் முழுவதும் கருத்துக்கள் மேலெழுந்து வரும் நிலையில் குற்றவாளி கள் என கருதப்படுவோருக்கு மரண தண்ட னை விதிக்கும் அதிகாரத்தை காவல்துறை யினர் எடுத்துக் கொண்டிருப்பது கண்டனத் திற்குரியது.
தண்டனை வழங்கும் அதிகாரம் காவல்துறைக்கு இல்லை
என்கவுண்ட்டர்களில் கொல்லப்பட்ட வர்கள் கடுமையான குற்றங்களில் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள் என்று கூறி விசாரணையின்றி கொல்லப்படுவதை நியாயப்படுத்த முடியாது. எத்தகைய மோச மான குற்றச்சாட்டுகளுக்கு ஆளானாலும் அவர் கைது செய்யப்பட்டு உரிய விசார ணைகள் மேற்கொண்டு நீதிமன்றங்கள் மூலம் தண்டனை பெற்றுத்தர வேண்டுமே தவிர, காவல்துறை சட்டத்தைக் கையி லெடுப்பது சரியல்ல.
தமிழ்நாட்டில் இதற்கு முன்பு பல என்கவுண்ட்டர்கள் நடந்துள்ளன. இதனால் ரவுடியிசம் ஒழியவில்லை. மாறாக, வளர்ந்த வண்ணம் தான் உள்ளது. சமூக விரோத சக்திகள் வளருவதற்கும், ரவுடியிசம் செய்வதற்கும் காவல்துறையினரின் மெத்தனப்போக்கும், அலட்சியமுமே முக்கிய காரணமாகும் என்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சுட்டிக்காட்ட விரும்புகிறது.
சிறைக்கொடுமைகள் அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்தும்
என்கவுண்ட்டர்கள் குற்றங்களைக் குறைத்துவிடும் என்றால் இந்நேரம் கொலைகள் குறைந்திருக்க வேண்டும். காவல்துறையினர் தங்கு தடையற்ற அதிகாரத்தை எடுத்துக் கொள்வதும் அவர் களே மரண தண்டனையை நிறைவேற்று வதையும் சட்டத்தின் ஆட்சியில் அனு மதிக்கவே முடியாது. இவையெல்லாம் ‘தற்காப்புக்காக நடத்தப்பட்டவை’ என்று சொல்வது நம்பும்படியாக இல்லை.
அதுபோல் கைது செய்யப்படுபவர்கள் கழிவறையில் வழுக்கி விழுந்ததால் கை, கால்கள் முறிந்துவிட்டன என்று கூறுவது சிறைச்சாலைகளில் நடக்கும் சித்ரவதை கள் தான் என்பதை மறுக்க இயலாது. இதற்கு முன்னர் நடந்த ஒரு என்கவுண் ட்டர் கொலையைப் பற்றி ஒரு தொலைக் காட்சிக்கு பேட்டியளித்த முன்னாள் டிஜிபி ஒருவர், சம்பந்தப்பட்டவர் 14 ஆண்டு களுக்கு முன்பாகவே தங்களின் ஹிட் லிஸ்ட்டில் இருந்ததாக தெரிவித்திருப்பதே இந்த என்கவுண்ட்டர்கள் எல்லாம் திட்ட மிட்டு நடத்தப்படுபவைகள் என்பதற்கான சாட்சியங்களாக அமைந்துள்ளன. இத்த கைய நடவடிக்கைகள் அரசுக்கு அவப் பெயரையே உருவாக்கும்.
காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்!
எனவே, தமிழக அரசு இந்த என்கவுண்ட்டர்கள் குறித்து நீதிவிசார ணைக்கு உத்தரவிட வேண்டுமென்றும், இனிமேல் என்கவுண்ட்டர் கொலை கள் நடைபெறக் கூடாது என காவல்துறை க்கு உறுதியாக ஆணையிட வேண்டுமென வும், என்கவுண்ட்டர்களுக்கு காரணமான காவல்துறையினர் மீது கடும் நட வடிக்கை எடுக்குமாறும், குற்றச் செயல் களில் ஈடுபடுபவர்களை கைது செய்து அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிமன்றங்கள் மூலம் உரிய தண்டனைகள் பெற்றுத் தருவதை உறுதி செய்யுமாறும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு தமிழ்நாடு அரசை வலியுறுத்து கிறது. இவ்வாறு கே. பாலகிருஷ்ணன் தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.