tamilnadu

ஊர்க்காவல் படை வீரர் தற்கொலை

சென்னை, ஜூன் 13- வண்ணாரப்பேட்டையில் குடும்பத் தகராறு காரணமாக ஊர்க்காவல் படை வீரர் தற்கொலை செய்து கொண்டார்.

பழைய வண்ணாரப்பேட்டை சுப்பு ராயன் தெருவை சேர்ந்தவர் சுரேஷ் (37). இவர் கடந்த 10 ஆண்டுகளாக தண்டை யார்பேட்டை காவல் நிலையத்தில் ஊர்காவல் படை பிரிவில் இருந்து வந்தார். இவரது மனைவி மகா தேவி (30). இவர்களுக்கு 4 மற்றும் 2 வயதில் குழந்தை கள் உள்ளனர்.

கணவன், மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.

அதேபோல் புதனன்று இரவு கண வன் மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து சுரேஷ் வீட்டில் இருந்த செல் ஆயிலை மதுவில் கலந்து குடித்ததாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து மனைவி மகாதேவி அவரை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார். அங்கு சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை காலை இறந்து போனார். இதுகுறித்து தண்டையார்பேட்டை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.