சென்னை, மே 17 - போதைப்பொருள் புழக்கத்தை தடுக்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மாநிலத்தில் கஞ்சா, போதைப் பொருள் விற்பனை, கடத்தலை தடுக்க நேர்மையான காவல் அதி காரிகள் கொண்ட உயர்மட்ட ரகசியக் குழு ஒன்றை அமைக்க வேண்டும் எனவும் இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு உத்தரவிட்டுள்ளது.
போதைப்பொருள் விற்பனை செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் களை ஒடுக்க வேண்டும் என்று முதல் வர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டி ருந்தார். இந்நிலையில் போதைப்பொ ருள் விற்பனை, கடத்தலை ஒழிக்க சிறப்பு பிரிவை உருவாக்க வேண்டும் என வலியுறுத்தி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் திருமுருகன் காந்தி என்பவர் மனுத் தாக்கல் செய்துள்ளார்.
இம் மனுவை விசாரித்த நீதிபதி கள், “தமிழகத்தில் போதைப்பொருள் நடமாட்டத்தை தடுக்க அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதில் எந்த சந்தேகமும் இல்லை” என்று தெரிவித்தனர். எனினும், “காவல்துறையினர் கூடுதல் விழிப்பு டன் இருந்து நடவடிக்கை எடுத்தால் மட்டுமே போதைப்பொருள் புழக்கம் அதிகரிக்காமல் தடுக்க இயலும்” என நீதிபதிகள் குறிப்பிட்டனர்.
“எனவே, தமிழகத்தில் கஞ்சா, போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனையை தடுக்கவும், போதைப் பொருள் குற்றவாளிகளுடன் கைகோர்த்து செயல்படும் சந்தே கத்துக்குரிய காவல் துறையினரை கண்காணிக்கவும் நேர்மையான காவல் அதிகாரிகள் உள்ளடங்கிய உயர்மட்ட ரகசியக் குழு அமைக்கப் பட வேண்டும்; இது தொடர்பாக, தலைமைச் செயலாளர், உள்துறை செயலாளர், டிஜிபி ஆகியோர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.