tamilnadu

img

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் தொடர்புடைய 21 பேர் மீது நடவடிக்கை துவங்கியுள்ளது

சென்னை, நவ. 17 - எடப்பாடி பழனிசாமி தலைமை யிலான அதிமுக ஆட்சியின்போது, தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு  எதிராக போராட்டம் நடைபெற்றது. அப்போது, 2018 மே 22 அன்று பொதுமக்கள் மீது காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில், அப்பாவிப் பொதுமக்கள் 13 பேர் கொடூரமான முறையில் சுட்டுக் கொல்லப்பட்டனர். விசாரணைக்குப் பிறகு இந்த வழக்கை தேசிய மனித  உரிமை ஆணையம் முடித்து வைத்தது. 

ஆனால், இதனை எதிர்த்து மனித உரிமை ஆர்வலர் ஹென்றி டிபேன் சென்னை உயர்நீதிமன்றத் தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் நிஷா  பானு மற்றும் மாலா ஆகியோர் அடங்கிய அமர்வில் வழக்கு வெள்ளியன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞர் சண்முக சுந்தரம் ஆஜராகி அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தார். 

அதில், நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் அளித்த அறிக்கையை அரசு ஏற்றுக் கொண்டு ள்ளதாகவும் அதன் அடிப்படையில், அப்போதைய மாவட்ட ஆட்சியர், 17 காவல் அதிகாரிகள், 3 வரு வாய்த்துறை அதிகாரிகள் என 21  பேருக்கு எதிராக நடவடிக்கை தொட ங்கப்பட்டு உள்ளதாக தெரிவித்தார்.

குறிப்பாக, அப்போது தூத்துக்குடி ஆட்சியராக இருந்த வி. வெங்கடேஷ், தென்மண்டல ஐ.ஜி.யாக இருந்த ஷைலேஷ் குமார் யாதவ் உள்ளிட்டோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எஸ்.பி. கபில் குமார் சரத்கர், துணை  வட்டாட்சியராக இருந்த சேகர் உள்ளிட்டோர் மீதும் துறை ரீதியான நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது என்றார். 

அப்போது குறுக்கிட்ட நீதிபதி கள், துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர் பாக சிபிஐ பதிவு செய்துள்ள வழக்கின் நிலை என்ன? ஒரு காவல்  அதிகாரி மீது மட்டும் குற்றப்பத்தி ரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதே, மற்ற போலீசாருக்கு எதிரான வழக்கு கைவிடப்பட்டதா? என்று அடுக்கடுக் கான கேள்விகளை எழுப்பினர்.

மேலும், தற்போது நடவடிக்கை க்கு உள்ளாகியுள்ள 21 பேருக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் என்ன? துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் அவர்களின் பங்கு என்ன? என்பது குறித்து தமிழக அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் நீதிபதி கள் உத்தரவிட்டனர். இந்த வழக்கின் விசாரணை டிசம்பர் 11-ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டு உள்ளது.

;