tamilnadu

img

தில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக வாலிபர் சங்கம் பிரச்சாரம்....

சென்னை:
தில்லியில் போராடும் விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளை மக்களிடம் விளக்கி பிரச்சாரம் செய்ய இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாநிலக்குழு முடிவு செய்துள்ளது.

இந்திய ஜனநாயக வாலிபர்  சங்கத்தின் தமிழ்நாடு மாநிலக்குழுக் கூட்டம் மாநிலத் தலைவர் என்.ரெஜீஸ்குமார் தலைமையில் கும்பகோணத்தில்  நடைபெற்றது.  மாநிலச் செயலாளர் எஸ்.பாலா, மாநிலப் பொருளாளர் தீபா மற்றும் மாநிலக்குழு உறுப்பினர் கள் கலந்துகொண்டனர். இக்கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.இந்திய விவசாயத்தையும் விவசாயிகளையும் சீரழிக்கும் வகையிலான மூன்று வேளாண் சட்டங்களை நிறைவேற்றிய மத்தியபாஜக அரசைக் கண்டித்தும்   விவசாய விரோதசட்டங்களை வாபஸ் பெற வலியுறுத்தியும் தலைநகர் தில்லியை முற்றுகையிட்டு விவசாயிகள் போராடிவருகின்றனர்.  விவசாயிகளை, விவசாயத்தை பாதுகாப்பதற்காக நடைபெறும் இப்போராட்டத்தில் பங்கெடுத்துள்ள விவசாயிகளை இந்தியஜனநாயக வாலிபர் சங்கத்தின் தமிழ்நாடுமாநிலக்குழு வாழ்த்தி வணங்குகிறது.  அவர்களது வீரம் செறிந்த போராட்டத்திற்கு  முழுமையான ஆதரவைதெரிவித்துக்கொள்கிறது. 

விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளை மக்களிடம் வலுவான முறையில் பிரச்சாரம் செய்திடவும்,  அவர்களது கோரிக்கைகளை எவ்வித நிபந்தனையுமின்றி உடனடியாக நிறைவேற்ற மத்திய அரசை வலியுறுத்தி ஆதரவு போராட்டங்களை வாலிபர் சங்கத்தின் அனைத்துக் கிளைகளும் நடத்திட வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

;