tamilnadu

img

போராடும் விவசாயிகளுக்கு தமுஎகச ரூ.3.50 லட்சம் நிதி.....

சென்னை:
விவசாயிகள் விரோத வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி தில்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு போராட்ட நிதியாக தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் - கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் இதுவரை ரூ. 3 லட்சத்து 50 ஆயிரம் நிதி அனுப்பப்பட்டுள்ளது. 

விவசாயிகள் போராட்டம் குறித்து தமுஎகச சார்பில் இணையவழி கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் பங்கேற்று அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் பொருளாளர் கிருஷ்ணபிரசாத், போராடும் விவசாயிகளுக்கு  கலைஞர்களும் படைப்பாளிகளும் நிதி அனுப்புமாறு வேண்டுகோள் விடுத்தார். இதை ஏற்று,  இதுவரை 3 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் தமுஎகச-வினரால் அனுப்பப்பட்டுள்ளது என்று பொதுச் செயலாளர் ஆதவன் தீட்சண்யா தெரிவித்துள்ளார்.

;