சென்னை, செப். 16 - தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில், அமைச்சர்கள் ‘சமூகநீதி நாள் உறுதிமொழி’ ஏற்றுக் கொண்டனர்.
தந்தை பெரியாரின் பிறந்த நாளான ‘செப்டம்பர் 17’, சமூகநீதி நாளாக கடைப்பிடிக்கப்படும் என்று கடந்த 6.9.2021 அன்று சட்டப்பேரவையில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். ஒவ்வோராண்டும் செப்டம்பர் 17 அன்று அரசு அலுவலகங்கள், பள்ளிகளில் ‘சமூக நீதி நாள்’ உறுதிமொழி ஏற்கப்படும் என்றும் அவர்கூறினார்.
அதன்படி, தந்தை பெரியாரின் 146-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை தலைமைச் செயலகத்திலுள்ள ராணுவ அணிவகுப்பு மைதானத்தில், பெரியாரின் உருவப் படத்திற்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் முதல்வர், உறுதிமொழியை வாசிக்க, சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு, அமைச்சர்கள் துரைமுருகன், கே.என். நேரு, பொன்முடி, உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் சமூகநீதி நாள் உறுதிமொழியை எடுத்துக் கொண்டனர்.