சென்னை:
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாநிலத் தலைவர் என்.ரெஜீஸ் குமார், மாநிலச்செயலாளர் எஸ்.பாலா ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில், புத்தாண்டு தினமான 2021 ஜனவரி 1 அன்று, விவசாயிகள் சங்கங்களின் கிளர்ச்சிப் போராட்டங்கள் நாடு முழுவதும் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்தச் சமயத்தில், அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் ஒருங்கிணைப்புக்குழு அறைகூவல் விடுத்துள்ள ‘விவசாயிகளைப் பாதுகாப்போம்’, ‘இந்தியாவைப் பாதுகாப்போம்’ என்ற முழக்கத்துடன் நடைபெறும் இந்த உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியில் வாலிபர் சங்கத் தோழர்கள் முழுமையாக பங்கேற்க வேண்டும். இந்த நிகழ்ச்சியில் தேசியக் கொடியுடனும், வாலிபர் சங்கக் கொடியுடனும் கலந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளனர்.