tamilnadu

img

போதைப் பொருள் விற்பனையை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும்

சென்னை, மே 16 - தமிழ்நாட்டில் போதைப் பொருட்களை விற்பனை செய்பவர்களை இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும் என்று காவல் துறையினருக்கு முதல மைச்சர் உத்தரவிட்டுள்ளார்

தமிழ்நாட்டில் போதைப்பொருள் தடுப்பு தொடர்பாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தலைமைச் செயலகத்தில் காவல்துறை உயர் அதிகாரிகளுடன் விரிவான ஆலோசனை மேற்கொண்டார்.

இந்தக் கூட்டத்தில் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, உள்து றைச் செயலாளர் அமுதா, காவல்துறை தலைவர் சங்கர் ஜிவால், சட்டம் ஒழுங்கு ஏ.டி.ஜி.பி. அருண், காவல்துறை ஆணையர்கள் சந்தீப் ராய் ரத்தோர், அமல்ராஜ், சங்கர் மற்றும் போதை தடுப்புப் பிரிவு போலீஸ் அதிகாரி கள், உளவுத்துறை அதிகாரி கள் உள்ளிட்ட முக்கிய அதி காரிகள் கலந்துகொண்டனர்.

இந்தக் கூட்டத்தில் போதைப்பொருளை ஒழிக்க ஒவ்வொரு மாவட்டத்திலும் இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து, எவ்வளவு பேர் கைது செய்ய ப்பட்டுள்ளனர் என்ற விவரமும் தெரிவிக்கப்பட்டது.

விமான நிலையம், ரயில் நிலையம், பேருந்து நிலையங்கள் என அண்டை மாநில எல்லைகள் ஆகிய இடங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப் பட்டுள்ள விவரங்கள் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்தக் கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் பேசும்போது, “போதைப்பொருள் விற்ப வர்களை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும். இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை விட இன்னும் அதிகமாக கண் காணித்து போதைப்பொ ருள் கடத்தி வருபவர்களை கைது செய்ய வேண்டும்” என்று அறிவுறுத்தினார்.

“துறைவாரியாக செயல் திட்டங்களை ஒருங்கி ணைத்து போதைப்பொருள் பயன்பாட்டிற்கு எதிராக நட வடிக்கைகளை தீவிரப் படுத்த வேண்டும்” எனவும் காவல்துறை உயர் அதிகாரி களுக்கு உத்தரவிட்டார்.

சில நாட்களுக்கு முன்பு  தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா தலைமை யில் காவல்துறை அதிகாரி களுடனான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் போதைப் பொருட்களை கட்டுப்படுத்த என்னென்ன நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என்று ஆய்வு செய்யப் பட்டது. இதைத் தொட ர்ந்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் தற் போது கூட்டம் நடைபெற்று ள்ளது.

;