tamilnadu

img

தூய்மை பணியாளர் ஆணைய தலைவர் ஐசிஎப் ஆலையில் ஆய்வு

சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் தூய்மை பணியாளர்களுக்கான தேசிய ஆணையத்தின் தலைவர் எம்.வெங்கடேசன் திங்களன்று (ஜூன் 10) சென்னை ஐசிஎப் நிறுவனத்தின் பொது மேலாளர் யு.சுப்பாராவ் மற்றும் துறைகளின் முதன்மைத் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினர். பின்னர் இங்கு தயாரிக்கப்படும் வந்தே பாரத், வந்தே மெட்ரோ மற்றும் தயாரிப்பில் உள்ள பிற பெட்டிகளையும், பணிமனை களையும் அவர் ஆய்வு செய்தார். பின்னர் பணியிடத்தில் பணி நிலைமைகள், சுகாதாரம், பாதுகாப்பு அம்சங்கள் குறித்து சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்களுடன் கலந்துரையாடினார். அனைத்து கட்டாய விதிமுறைகளையும் பின்பற்றவும், அனைத்து தூய்மை பணியாளர்களுக்கும் காப்பீடு வழங்கவும் ஒப்பந்ததாரர்களுக்கு அவர் அறிவுறுத்தினார்.