tamilnadu

சென்னையில் இருந்து சீரடி, அந்தமான் விமானங்கள் ரத்து

சென்னை, ஜூன்.2- சென்னை விமான நிலையத்தில் இருந்து ஸ்பைஸ் ஜெட் விமான நிறு வனம் தில்லி, ஐதராபாத், சீரடி, கோவா, அந்தமான் உட்பட பல்வேறு நகரங்க ளுக்கு விமானம் இயங்கி வருகிறது. இந்த நிலையில் சனிக்கிழமை முதல் வருகிற 10-ந் தேதி வரை ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவனம் அனைத்து நகரங்க ளுக்கும் செல்லும் விமானங்களை ரத்து செய்வதாக அறிவித்துள்ளது.

ஞாயிறன்று காலை சீரடி, அந்தமான் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல ஏற்கெனவே முன்புதிவு செய்து இருந்த வர்கள் பயணம் செய்ய வந்தனர். அவர்களை பாதுகாப்பு வீரர்கள் அனு மதிக்கவில்லை. 10-ந் தேதி வரை ஸ்பைஸ் ஜெட் விமானம் ரத்து செய்ய ப்பட்டுள்ளது என்று தெரிவித்தனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த பயணி கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். சென்னை விமான நிலையத்தில் இருந்து ஒரு நாளைக்கு அந்த நிறு வனத்தின் 12 விமானங்கள் பல்வேறு நகரங்களுக்கு இயக்கப்படுகிறது. பத்து நாட்களுக்கு சுமார் 120 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இது குறித்து சம்பந்தப்பட்ட விமான நிர்வாகம், நிர்வாக சீர்திருத்தம் காரணமாக விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவித்து ள்ளது.

;