வடசென்னை மக்களவைத் தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமி வெற்றி பெற்றதை அடுத்து தேர்தல் அதிகாரி காட்டா ரவி தேஜா, அவருக்கு வெற்றி பெற்றதற்கான சான்றிதழை வழங்கினார். அமைச்சர் பி.கே.சேகர்பாபு, சட்டமன்ற உறுப்பினர்கள் மாதவரம் எஸ்.சுதர்சனம், ஆர்.டி.சேகர், கே.பி.சங்கர், மேயர் ஆர்.பிரியா ஆகியோர் உடன் இருந்தனர்.