சென்னை, ஜூன் 2- சென்னை மாதவரம் தபால் பெட்டி பகுதியை சேர்ந்தவர் முத் தையா. அவர் மாதவரம் கே.கே.ஆர். கார்டன் தெருவில் மருந்து கடை நடத்தி வந்தார். அவர், தன்னுடைய கடையில் 30 மில்லி லிட்டர் தாய்ப் பாலை பாட்டிலில் அடைத்து ரூ. 500-க்கு விற்பனை செய்வதாக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி களுக்கு தகவல் கிடைத்தது.
தகவலின் அடிப்படையில், நேற்று முன்தினம் அவரது கடையில் உணவு பாதுகாப்புத்துறை அதி காரிகள் சோதனை நடத்தினர். அப்போது, பாட்டிலில் அடைத்து வைத்து தாய்ப்பால் விற்பனை செய் தது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, கடைக்கு உண வு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர். புரதச்சத்து பவுடர் விற்பதற்காக வழங்கப்பட்ட உரி மத்தை வைத்து தாய்ப்பால் விற் பனை செய்து வந்ததும் அதிகாரிகள் விசாரணையில் தெரியவந்தது.
இந்த நிலையில், தமிழகம் முழு வதும் தாய்ப்பால் விற்பனை குறித்து தீவிரமாக கண்காணித்து நடவ டிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி, சட்டவிரோதமாக தாய்ப்பால் விற் பனை தொடர்பாக உணவு பாது காப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள்.
எங்கெல்லாம் விதிகளுக்கு எதி ராக தாய்ப்பால் விற்பனை நடை பெற்று வருகிறது என்பது குறித்து தீவிரமாக கண்காணித்து வரு கிறார்கள். தாய்ப்பால் விற்பனை செய்வது சட்டப்படி குற்றம் என்ப தால், வேறு பொருட்கள் விற்பனை செய்வதாக கூறி தாய்ப்பால் விற் பனை செய்பவர்கள் உரிமத்தை ரத்து செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது. அதேபோல், சென்னையில் தாய்ப்பால் விற்பனையை கண்கா ணித்து நடவடிக்கை எடுக்க 18 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
மேலும், தாய்ப்பால் விற்பனை குறித்து 94440 42322 என்ற எண்ணில் பொதுமக்கள் புகார் தெரிவிக்க லாம். புகார்களை வாட்ஸ்அப் மூல மாகவோ அல்லது குறுஞ்செய்தியா கவோ அனுப்பலாம். புகாரின் பேரில் தீவிர ஆய்வு நடத்தி சம்பந் தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று உணவு பாது காப்புத்துறை அதிகாரிகள் தெரி வித்துள்ளனர்.