சென்னை, மே 20 - யானைகள் வழித்தடம் தொடர்பான கருத்துக்களை தெரிவிப்பதற்கு குறைந்தபட்சம் 60 நாட்கள் அவகாசம் வழங்கி, அனைத்துதரப்பு மக்களி டம் விரிவான கருத்துக் கேட்பு கூட்டங் களை நடத்திட வேண்டும் என்று வனத்துறை மற்றும் வருவாய்த்துறை யினரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக் கொண்டுள்ளது.
இதுதொடர்பாக கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் கே. பால கிருஷ்ணன் தமது அறிக்கையில் குறிப்பிட்டிருப்பதாவது:
ஒருவார அவகாசம் பொருத்தமற்றது
தமிழ்நாடு வனத்துறை கடந்த ஏப்ரல் 29 அன்று யானைகள் வழித்த டம் தொடர்பான அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது. அதில் 42 இடங் களில் யானைகள் வழித்தடம் கண்டறி யப்பட்டு உள்ளதாகவும், இதுதொடர் பாக ஒரு வார காலத்திற்குள் பொது மக்கள் தங்கள் கருத்துக்களை வெளியிட வேண்டுமெனவும் குறிப்பிடப்பட்டுள் ளது. இது மக்களிடையே குழப்பத்தை யும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
விரிவான கருத்துக் கேட்பு வேண்டும்
யானைகள் வழித்தடம் தொடர்பான அறிக்கையினை வெளியிட்ட வனத் துறை போதுமான கால அவகாசம் வழங்காமல் ஒரு வார காலத்திற்குள் மக்கள் தங்கள் கருத்துக்களை தெரி விக்க வேண்டும் என கோரியிருப்பது எந்த வகையிலும் பொருத்தமானதல்ல என சுட்டிக்காட்டுவதோடு, குறைந்த பட்சம் அறுபது நாட்களுக்கு கருத்து கேட்புக்கான காலத்தை நீட்டிக்க வேண்டும் எனவும் யானைகள் வழித்த டம் என அறிக்கையில் சுட்டிக்காட்டப் பட்டுள்ள இடங்களில் வசிக்கும் மக்கள், அரசியல் கட்சிகள், சூழலியல் அமைப்பு கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பின ரின் கருத்துக்களை அறியும் வகையில் விரிவான கருத்துக் கேட்புக் கூட்டங் களை நடத்திட முன்வர வேண்டு மென வனத்துறை மற்றும் வருவாய்த் துறையினரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக் கொள்கிறது.
அரசு தலையிட வேண்டும்!
மேலும், தமிழக அரசும் இப்பிரச்ச னையில் உடனடியாக தலையிட்டு மக்க ளிடையே எழுந்துள்ள அச்சத்தை போக்கவும், யானைகள் வழித்தடம் தொடர்பான பிரச்சனையில் ‘வன உரிமை அங்கீகாரச் சட்டம் -2006’ அளித் துள்ள உரிமைகளை பாதுகாக்கவும் உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டு மெனவும் கேட்டுக் கொள்கிறோம்.இவ்வாறு கே. பாலகிருஷ்ணன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.