tamilnadu

img

9 மாடி வணிக வளாகத்துடன் புதிய பேருந்து நிலையம் பிராட்வேயில் அமைகிறது: மாதிரி புகைப்படம் வெளியீடு

சென்னை, மே 21- சென்னை பாரிமுனையில் (பிராட்வே) 9 மாடிகள் கொண்ட வணிக வளாகத்துடன் கொண்ட பேருந்து நிலையம் அமைக்கப்பட உள்ளது.

சென்னையில் மிகவும் பழமை வாய்ந்ததாகவும், சிறப்பு வாய்ந்த பேருந்து நிலையமாகவும் பிராட்வே பஸ் நிலையம் திகழ்கிறது. இந்த பஸ் நிலையத்தில் கடந்த 2002ம் ஆண்டு வரை மாவட்ட பேரூந்து கள் மற்றும் வெளியூர் பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தன. பின்னர் போக்குவரத்து நெரிசல் காரணமாக தென் மாவட்டம் உள்பட பல்வேறு மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகள் கோயம்பேட்டுக்கு மாற்றப்பட்டன. இதனையடுத்து பிராட்வேயில் இருந்து மாநகர பேருந்துகள் மட்டும் இயக்கப்பட்டு வருகின்றன.

பழமையான இந்த பேருந்து நிலையத்தை மேம்படுத்த வேண்டும் என பொதுமக்களும், பயணிகளும் கோரிக்கை வைத்து வந்தனர். இதைத் தொடர்ந்து, ரூ.823 கோடியில் நவீன வசதிகளுடன் வணிக வளாகத்துடன் கூடிய பேருந்து முனையமாக பிராட்வே பேருந்து நிலையம் கட்டப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

 தீவுத்திடலுக்கு மாற்றம்

இதற்கிடையே பிராட்வேயில் ஒருங்கிணைந்த போக்குவரத்து முனையம் அமைக்கும் பணிக்காக அடுத்த சில மாதங்களில் பிராட்வே பேருந்து நிலையம் தீவுத்திடலுக்கு இடமாற்றம் செய்யப்பட உள்ளது. தீவுத்திடலில் தற்காலிக பேருந்து நிலையம் அமைக்க சென்னை மாநகராட்சி சார்பில் ரூ.5 கோடி செலவில் அடிப்படை வசதிகள் செய்யப்பட உள்ளன.அதன்பிறகு பிராட்வே பேருந்து நிலையம் இடிக்கப்பட்டு போக்குவரத்து முனையம் அமைக்கும் பணி தொடங்கப்படுகிறது.

9 மாடி வணிக வளாகம்

பிராட்வே பேருந்து நிலையம் இருக்கும் இடத்தில் 9 மாடிகள் கொண்ட வணிக வளாகத்துடன் கொண்ட அமைக்கப்பட உள்ளது.

நவீன வசதிகளுடன் கட்டப்பட வுள்ள பேருந்துநிலையத்திற்கான மாதிரி புகைப்படங்கள் வெளி யிடப்பட்டுள்ளன. மொத்தம் 4  மாடல்கள் புகைப்படங்கள் வெளி யிடப்பட்டு உள்ளன. இதில் ஒன்று தேர்வாகும். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

குறளகம் கட்டிடம் இடிப்பு

குறளகம் கட்டிடம் இடிக்கப்பட்டு 10 மாடிகள் கொண்ட வணிக  வளாகம் கட்டப்பட உள்ளது. இங்கிருந்து மெட்ரோ ரயில் நிலையம், புறநகர் ரயில் நிலையம் என அனைத்தையும் இணைக்கும் வகையில் 7 நடை மேம்பாலம் அமைக்கப்படவுள்ளது.

இது போக அண்ணாநகர் (மேற்கு), கே.கே.நகர் மற்றும் மந்தை வெளியில் உள்ள பேருந்து நிலையங்கள் மற்றும் டெப்போக்கள் அலு வலகம் மற்றும் வணிக வளாகங்களுடன் நவீனமயமாக்கப்படும். அதற்கான விரிவான திட்ட அறிக்கைகள் தயாரிக்கப்படும் என்றும் அறி விக்கப்பட்டுள்ளது.
 


 

 

;