திருவாரூர், ஜூன் 9- திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங் களில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 4,251 வழக்கு களுக்கு தீர்வு காணப்பட்டது.
திருவாரூர் மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற மக்கள் நீதிமன்றங்களில் ரூ.1.64 கோடிக்கு சமரசத் தீர்வு காணப்பட்டது.
திருவாரூர் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் உள்ள சட்டப்பணிகள் ஆணைக் குழுவில் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுவின் தலைவரும், மாவட்ட முதன்மை நீதிபதியுமான பி. செல்வமுத்துகுமாரி தலைமை வகித் தார். விரைவு மகளிர் நீதிமன்ற நீதிபதி ஜி.சரத்ராஜ் முன்னிலை வகித்தார்.
இதில் சார்பு நீதிபதி ஜி. கிருஷ்ணன், மாவட்ட உரிமையி யல் நீதிபதி எஸ்.விஜய் ஆனந்த், குற்றவியல் நீதிமன்ற நீதிபதி பி. மகேந்திரவர்மா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. சிவில், ஜீவனாம்சம், திருமண வழக்குகள், காசோலை வழக்கு கள், மோட்டார் வாகன விபத்து வழக்குகள் மற்றும் வங்கி வாராக் கடன் ஆகிய வழக்குகள் எடுத்துக் கொள்ளப்பட்டன.
அந்த வகையில், திருவாரூர் மாவட்டத்தில் அனைத்து நீதி மன்றங்களிலும் 3,073 வழக்குகள் எடுத்துக் கொள்ளப்பட்டு, அதில் 643 வழக்குகளில் ரூ.1,64,14,471 மதிப்புக்கு சமரசத் தீர்வு காணப் பட்டது.
தஞ்சாவூர்
தஞ்சாவூர் மாவட்ட ஒருங்கி ணைந்த நீதிமன்றம் மற்றும் மாவட் டத்திலுள்ள கீழமை நீதிமன்றங்க ளில் நிலுவையிலுள்ள வழக்கு களை சமரசமாகப் பேசி தீர்வு காண்பதற்காகத் தேசிய அளவி லான சிறப்பு மக்கள் நீதிமன்றம் சனிக்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்வுக்கு மாவட்ட முதன்மை நீதிபதியும், மாவட்டச் சட்டப்பணிகள் ஆணைக் குழுத் தலைவருமான கே.பூரண ஜெய ஆனந்த் தலைமை வகித்தார். கூடுதல் மாவட்ட நீதிபதி ஜி. சுந்தரராஜன், குற்றவியல் விரைவு நீதிமன்ற நடுவர் டி.சோழவேந்தன், வழக்குரைஞர் ஆர். திராவிட செல்வன் ஆகியோர் கொண்ட முதலாவது அமர்வில் குடும்ப நல வழக்குகளுக்கு தீர்வு காணப் பட்டது.
சிறப்பு மாவட்ட நீதிபதி எம்.வடி வேலு, 2 ஆவது குற்றவியல் நீதித் துறை நடுவர் எஸ்.ராஜேஸ் கண்ணன், வழக்குரைஞர் கே.சுந்தர மூர்த்தி ஆகியோர் கொண்ட இரண்டாவது அமர்வில் உரிமையி யல் மற்றும் குற்றவியல் வழக்கு களுக்கு தீர்வு காணப்பட்டது.
கூடுதல் சார்பு நீதிபதி எம்.முருகன், மாவட்ட உரிமையியல் நீதிபதி டி.பாரதி, வழக்குரைஞர் என். மகாலட்சுமி ஆகியோர் கொண்ட 3 ஆவது அமர்வில் மோட்டார் வாகன விபத்து வழக்கு களுக்கு தீர்வு காணப்பட்டது.
இவற்றுடன் கும்பகோணம், பாபநாசம், பட்டுக்கோட்டை, ஒரத்த நாடு, திருவையாறு ஆகிய வட்டச் சட்டப் பணிகள் குழுவின் அமர்வு களிலும் விசாரணை நடத்தப்பட்டது.
இவற்றின் மூலம் மாவட்டத்தில் மொத்தம் 3,930 வழக்குகள் விசா ரணைக்கு எடுத்துக் கொள்ளப் பட்டு, 2,006 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. இதில் ரூ.14,54, 63,416 அளவுக்கு தீர்வு தொகை யாக வழக்காடிகளுக்கு பெற்றுத் தரப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் தஞ்சாவூர் நிரந்தர மக்கள் நீதிமன்றத் தலைவ ரும், மாவட்ட நீதிபதியுமான சி. ஜெயஸ்ரீ, முதலாவது கூடுதல் மாவட்ட நீதிபதி சத்யதாரா, மாவட்டச் சட்டப்பணிகள் ஆணைக் குழுச் செயலரும், சார்பு நீதிபதியு மான எஸ்.இந்திராகாந்தி, தஞ்சா வூர் வழக்குரைஞர் சங்கத் தலைவர் தியாக.காமராஜ், செயலர் சுந்தர ராஜன், ஆணைக் குழு நிர்வாக அலு வலர் பி.சந்தோஷ்குமார் உள்ளிட் டோர் கலந்து கொண்டனர்.
புதுக்கோட்டை
புதுக்கோட்டை மாவட்ட சட்டப் பணிகள் ஆணையத்தின் சார்பில் சனிக்கிழமை தேசிய மக்கள் நீதி மன்றம், மாவட்ட நீதிமன்ற வளா கத்தில் 8 அமர்வுகளாகவும், மாவட் டத்தின் பிற பகுதிகளிலுள்ள நீதி மன்றங்களில் 12 அமர்வுகளாகவும் என மொத்தம் 20 அமர்வுகளில் நடைபெற்றன.
மாவட்ட முதன்மை நீதிபதியும், சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவருமான ஜி.சுபத்ராதேவி தலைமை வகித்து தொடங்கி வைத் தார். மாவட்ட குடும்பநல நீதிபதி எஸ்.ஜெயந்தி, கூடுதல் மாவட்ட நீதிபதி ஜி.எம்.வசந்தி, அத்தியா வசிய பண்டங்கள் சட்ட சிறப்பு நீதிபதி ஏ.கே.பாபுலால், முதன்மை குற்றவியல் நடுவர் எஸ்.சசிகுமார், மாவட்ட உரிமையியல் நீதிபதி டி. பூர்ணிமா, குற்றவியல் நடுவர்-1 என்.விஸ்வநாதன் உள்ளிட்டோ ரும் பங்கேற்றனர்.
மாவட்டம் முழுவதும் மொத்தம் 4,773 வழக்குகள் பட்டியலிடப் பட்டன. இவற்றில் 1,602 வழக்கு களுக்கு சுமுகத் தீர்வு காணப்பட் டது. மொத்தம் ரூ.4.03 கோடி மதிப்பில் தீர்வம் பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதற்கான ஏற்பாடு களை மாவட்ட சட்டப்பணிகள் ஆணையத்தின் செயலரும், சார்பு நீதிபதியுமான இ. ராஜேந்திர கண்ணன் செய்திருந்தார்.
அறந்தாங்கி
அறந்தாங்கியில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்துக்கு ஓய்வுபெற்ற மாவட்ட முதன்மை நீதிபதி எஸ்.பாலராஜமாணிக்கம் தலைமை வகித்தார். சார்பு நீதிபதி ஏ.உமாமகேஸ்வரி முன்னிலை வகித்தார். வராக்கடன் உள்ளிட்ட 245 வழக்குகளில் 12 வழக்குகள் ரூ. 10.12 லட்சத்துக்கு பேசி முடிக்கப் பட்டது.