tamilnadu

img

கொள்முதல் நிலையத்தில் 10 ஆயிரம் நெல் மூட்டைகள் மழையில் முளைத்து வீணானது.... விவசாயிகள் வேதனை...

ராணிப்பேட்டை:
கொள்முதல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த 10 ஆயிரம் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து முளைவிட்டு வளர்ந்துள்ளது. இதனால் விவ சாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த நெல்வாய் ஊராட்சியில் தென்னல், எஸ்.கொளத்தூர் ஆகிய பகுதிகளில் அரசு நெல் கொள்முதல் நிலையம் உள்ளன. சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் தங்கள் விளைநிலங்களில் விளைவித்த நெல்லை நெல் கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்கின்றனர்.

இந்நிலையில் கடந்த மாதம் நெல்வாய், தென்னல், எஸ்.கொளத்தூர் மற்றும் சுற்றுப்புற கிராமங் களைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்டவிவசாயிகள் நெல்லை விற்பனைக் காக கொண்டு சென்றனர். அப்போதுஅதிகாரிகள் கடந்த 23 ஆம் தேதியே நெல்லை கொள்முதல் செய்யும் காலம் முடிவடைந்துவிட்டது. இதனால் நெல் மூட்டைகளை தற்போது கொள்முதல் செய்ய முடியாது என்று கூறியுள்ளனர்.இதனால் விவசாயிகள் கொண்டு வந்த நெல் மூட்டைகள் கொள்முதல் நிலைய வளாகத்தில் வைத்திருந்தனர்.இந்நிலையில் நிவர் புயல் மற்றும் புரெவி புயல்களால் தொடர்ந்து கனமழை பெய்தது. இதனால்  நெல் மூட்டைகள் மழையில்நனைந்து வீணானது.  மூட்டைகளில் இருந்தபடியே நெல்முளை விட்டு வளர்ந்துள்ளது. இதனால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.

கொரோனா நெருக்கடி காலத்திலும்   விவசாயம் செய்து விளைவித்த நெல் மூட்டைகளை நெல் கொள்முதல் நிலையத்தில்  வாங்காமல் அதிகாரிகள்  அலட்சியம்காட்டுகின்றனர். நாங்கள் கொண்டு வந்த நெல் மூட்டைகள் மழையில் நனைந்துஎங்களின் எதிர்காலம் கேள்விக்குறி யாகியுள்ளது. எனவே மாவட்ட ஆட்சியர் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு மழையால் சேதமடைந்த நெல் மூட்டைகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

;