tamilnadu

img

மாநிலத்தின் வனப்பரப்பு 33 சதவிதத்தை விரைவில் எட்டும் முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி நம்பிக்கை

கோவை, செப்.28– தமிழகத்தில் வனப்பரப்பு 33  சதவிகிதத்தை விரைவில் எட்டும் என தமிழக முதல்வர் எடப்பாடி  கே.பழனிச்சாமி தெரிவித்தார்.  கோவை தமிழ்நாடு வன உயர் பயிற்சியகத்தில் பயிற்சி முடித்த 550 வனக்காப்பாளர்களுக்கும், 45  ஓட்டுநர்களுக்கும் சான்றிதழ் மற்றும் பதக்கம் வழங்கும் விழா வெள்ளியன்று நடைபெற்றது. இதில், தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி கலந்து கொண்டு வனக்காப்பாளர்களின் அணி வகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். இதனை தொடர்ந்து பயிற்சி பெற்ற வனக்காப்பாளர்கள் செய்த சாகச நிகழ்ச்சிகளை பார் வையிட்டார். இந்நிகழ்ச்சியில், வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள் ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதைத்தொடர்ந்து முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி பேசுகை யில், வனத்துறையைப் பொறுத்த வரை ஒட்டுமொத்த இந்தியாவிற் கும் தமிழகம் முன்னோடியாக இருந்து வருகிறது. தற்போது தமிழ கத்தில் வனப்பரப்பளவு 20.21 சதவிகிதம் என்ற அளவில் இருக் கின்றது.  அதேநேரம், வனப்பரப்பு 33 சதவிகிதம் எட்டிடும் வகையில் அரசால் செயல்பாடுகள் மேற் கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒருபகுதியாக 2021 ஆம் ஆண்டுக் குள் 71 லட்சம் மரக்கன்றுகளை நடுவது என இலக்காக கொண்டு இந்த அரசு செயல்படுவதாக அவர் தெரிவித்தார். மேலும், வனத்துறை பணியில் ஈடுபட இருக்கும் வனக் காப்பாளர்களுக்கு வனம் சார்ந்த பல்வேறு பணிகள் காத்திருக்கின் றது. அதற்குத் தயாராக இருக்க வேண்டும் என்றார். இதேபோல், சென்னையில் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவிற்கு இன்னும் அரிய வகை பறவைகள், விலங்கு களைக் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் முதல்வர் தெரிவித்தார். முன்னதாக, வனக்காப்பாளர் களுக்கு கடந்த 6 மாதமாக நடை பெற்ற பயிற்சியில் தீ தடுப்பு, மனித விலங்குகள் மோதல் தடுப்பு, நீர் மேலாண்மை, கவாத்து, யோகா, வாகனம் ஓட்டுதல், நீச்சல் உள் ளிட்ட பல்வேறு பயிற்சிகள் அளிக் கப்பட்டன. மேலும், தமிழ்நாடு முழு வதிலும் உள்ள புலிகள் காப்பகம் மற்றும் வன ஆராய்ச்சி நிலையங் கள், வன தோட்டங்கள், சதுப்பு நில காடுகள் என வனப்பகுதிகளில் 15 நாட்கள் தீவிர பயிற்சிகள் அளிக்கப் பட்டது என்பது குறிப்பிடத்தக்க தாகும்.