அமெரிக்கா குத்துச்சண்டை வீரரான பேட்ரிக் டே, குத்துச்சண்டை போட்டியின் போது மூளை அதிர்ச்சியால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்.
அமெரிக்காவின் சிகாகோ மாநிலத்தில் யு.எஸ்.பி.ஏ குத்துச்சண்டை போட்டிகள் நடைபெற்றன. இதில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற போட்டியில் நியூயார்க்கை சேர்ந்த முன்னாள் கோல்டன் கிளவுஸ் சாம்பியன் பேட்ரிக் டேவும், ஒகியோ மாநிலத்தைச் சேர்ந்த ஒலிம்பிக் சாம்பியனான கான்வெல்லும் மோதினர். இந்த போட்டியின் 10 வது ரவுண்டில், இருவரும் மோதிக்கொண்ட போது திடீரென பேட்ரிக் மயங்கி கீழே விழுந்தார். உடனடியாக அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பேட்ரிக் மூளை அதிர்ச்சியால் பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். நான்கு நாட்களாக கோமாவில் இருந்த பேட்ரிக் டே நேற்று உயிரிழந்தார்.
முன்னதாக உலக அளவில் குத்துச்சண்டை போட்டி மைதான வளையத்திற்குள், இந்த ஆண்டு மட்டும் 3 குத்துச்சண்டை வீரர்கள் இதே போல், மூளை அதிர்ச்சியால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.