தெலுங்கானா அரசின் தொழிலாளர் விரோத நடவடிக்கையால் பாதிக்கப்பட்டு போராடிக்கொண்டிருக்கும் அரசு போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ஆதரவாக தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. மாவட்டச் செயலாளர் நடராஜன், தலைவர் சந்திரன், பொருளாளர் தேவராஜ், மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.