tamilnadu

img

காலமானார்

கடலூர்,ஜன.27- தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் கடலூர் மண்டல  சிஐடியு  சிறப்பு தலைவரும், சம்மேளன துணைத் தலைவரு மான ஜி.பாஸ்கரனின் தாயார் ஜி.பாரதா அம்மாள்  உடல் நலக்குறைவால் ஞாயிற்றுக்கிழமை(ஜன.26) காலமானார். அவருக்கு வயது 80. கடலூரை அடுத்த ரெட்டியார் பேட்டை கிராமத்தில் இறுதி  நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அவருடைய உடலுக்கு மார்க் சிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் டி.ஆறுமுகம், மாநிலக்  குழு உறுப்பினர் ஜி.மாதவன், மாவட்ட செயற்குழு உறுப்பி னர்கள் வி. சுப்புராயன், எஸ்.ஜி. ரமேஷ்பாபு,  ஜி.ஆர். ரவிச்சந்தி ரன், கடலூர் நகரச் செயலாளர் ஆர்.அமர்நாத், மாவட்டக் குழு உறுப்பினர் ஆர்.தமிழரசன், ஒன்றியச் செயலாளர் ஜெ.  ராஜேஷ் கண்ணன், அரசு போக்குவரத்துக் கழக ஊழியர் சங்கத்தின் தலைவர் ஜான் விக்டர், பொதுச் செயலாளர் மணிவண்ணன் ,பொருளாளர் அரும்பாலன், தொமுச தலைவர் பழனிவேல், பாட்டாளி தொழிற் சங்கத் தலைவர் ஜெய்சங்கர், பொதுச் செயலாளர் ராஜமூர்த்தி, ஏஎல்எல்எப் செயலாளர் கருணாநிதி, எம்எல்எப் மணிமாறன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.