states

பள்ளி ஆசிரியர்- மக்களைக் கொன்ற 13 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

ஸ்ரீநகர், அக்.16- காஷ்மீரில் கடந்த சில நாட்களுக்கு முன் அரசு பள்ளி ஆசிரியர் மற்றும் பெண் முதல்வர் என 2 பேர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட னர்.  ஒரு வாரத்தில் பொதுமக்களில் 7 பேர் வரை படுகொலை செய்யப் பட்டது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் ஜம்மு -காஷ்மீரின் ஐ.ஜி. விஜயகுமார் செய்தியாளர்களி டம் கூறுகையில், காஷ்மீரில் பொதுமக்கள் படுகொலையுடன் தொடர்பு டைய 13 பயங்கரவாதிகள், 9 என்கவுண்ட்டர்களில் கொல்லப்பட்டனர். கடந்த 24 மணிநேரத்தில் ஸ்ரீநகரை சேர்ந்த 5 பயங்கரவாதிகளில் 3 பயங்கர வாதிகளை நாங்கள் சுட்டு கொன்றுள்ளோம் என்று தெரிவித்தார்.

;