லக்னோ, ஜன.7- முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பேரனும், சஞ்சய் காந்தி - மேனகா தம்பதியின் மக னுமான வருண் காந்தி, பாஜக எம்.பி.யாக இருந்து வருகிறார். மோடி அரசு, வேளாண் சட்டங் களைக் கொண்டுவந்தது முதல் அவர் பாஜகவை கடுமையாக விமர்சித்து வருகிறார். “விவசாயிகள் சுரண்டப்படு வது தெரிய வந்தால், ஒன்றிய அரசு முன்பு கையைக் கட்டி வெறு மனே வேடிக்கை பார்த்துக் கொண் டிருக்க மாட்டேன்” என்றும், “காந்தியை இழிவுபடுத்துவதாக நினைத்துக் கொண்டு கோட்சே வைப் புகழ்பவர்கள் இந்தியா வையே இழிவுபடுத்துகிறார்கள்” என்றும் பாஜக-வை விமர்சித்த வருண் காந்தி அண்மையில், “ஒமைக்ரான் தொற்றைக் கட் டுப்படுத்துதல் அல்லது தேர்தல் பலத்தை நிரூபித்தல்... இந்த இரண்டில் எது முக்கியம் என் பதை உறுதி செய்ய வேண்டும்” என்று பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் உ.பி.யில் தேர்தல் பிரச்சாரத்தை ஈடுபட்டதைக் கண்டித்தார். இதனிடையே லக்னோவில் வியாழனன்று புதிதாக பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.
அதில், “நாடு தற்போது சிக்கலில் இருக்கிறது. வேலையில்லாத் திண்டாட்டமும், பணவீக்கமும் அதிகரித்து வருகிறது. எல்லா வற்றுக்கும் மேலாக தனியார் மயம் என்ற பெயரில் முக்கிய நிறு வனங்கள் விற்பனை செய்யப் பட்டு வருகின்றன. எல்லாவற்றை யும் விற்பனை செய்தால் நாடு என்னவாகும்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார். “நமது முன்னோர்கள் எண் ணற்ற தியாகங்கள் செய்து நாட்டுக்கு விடுதலை பெற்று தந்த னர். அத்தகைய நாடு அழிக்கப்படு வதை நம்மால் பார்த்துக் கொண் டிருக்க முடியாது. நாட்டை காப் பாற்ற வேண்டும். நேர்மையான வர்களை அரசியலுக்கு கொண்டு வாருங்கள். உங்கள் பிரச்சனை களைத் தீர்க்கக்கூடிய தலை வர்களை தேர்ந்தெடுங்கள்” என் றும் மக்களுக்கு அவர் அழைப்பு விடுத்துள்ளார்.