“இந்தியா” கூட்டணி யை கண்டு பாஜக அஞ்சி நடுங்கி வரு கிறது. இதனால் மத்திய அமைப்புகள் மூலம் மிரட்டல் மற்றும் பாரத ரத்னா விருது மூலம் “இந்தியா” கூட்டணி கட்சிகளை தேசிய ஜன நாயக கூட்டணிக்கு இழுக்க பாஜக தீவிரமாக சதி வேலை களில் ஈடுபட்டு வருகிறது.
மிரட்டல் மற்றும் பீகார் மாநி லத்தின் முன்னாள் முதல்வர் கர்பூரி தாக்கூருக்கு பாரத ரத்னா விருது அளித்து நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளத்தை தேசிய ஜனநாயக கூட்டணிக்கு இழுத்தது போன்று, உத்தரப்பிரதேசத்தில் முன் னாள் பிரதமர் சவுத்ரி சரண் சிங்கிற்கு பாரத ரத்னா விருது வழங்கி ஆர்ஏடி கட்சியை தங் கள் பக்கம் வளைத்துள்ளது பாஜக.
இந்நிலையில், சிவ்பால் சிங் மூலம் சமாஜ்வாதி கட்சி யில் பிளவை உருவாக்க பாஜக தீவிரம் காட்டி வருவதாக சமீ பத்தில் தகவல் வெளியானது. இதனை உறுதிப்படுத்தும் வித மாக உத்தரப்பிரதேச முதல் வர் யோகி ஆதித்யநாத், “சமாஜ்வாதி கட்சியில் சிவ்பா லுக்கு உரிய மரியாதை கிடைப் பதில்லை, அவரை அகிலேஷ் மதிப்பதில்லை” என பேசி னார்.
முதல்வர் யோகி ஆதித்ய நாத்தின் சூழ்ச்சி கலந்த அர சியல் ஆதாய கருத்தை தெளி வாக உணர்ந்த சிவ்பால் சிங், “நான் எப்போதும் தீவிர சமாஜ் வாதியாகவும், அகிலேஷின் சித்தப்பாவாகவும் இருப் பேன்’’ என உத்தரப்பிரதேச சட்டமன்றத்திலேயே பாஜக வின் சூழ்ச்சிக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், “முதல்வர் யோகி ஆதித்யநாத் சில சம யங்களில் என்னைப் பற்றி கவ லைப்படுவது போல பேசுகி றார். ஆனால் நான் எப்போ தும் தீவிர சமாஜ்வாதியாகத் தான் இருப்பேன். நான் எப் போதும் பிற்படுத்தப்பட்டோர், தலித்துகள், சிறுபான்மையின ருடன் தான் இருப்பேன். முக்கி யமாக அகிலேஷின் சித்தப்பா வாக எப்போதும் இருப்பேன். சட்டமன்றத்தில் பாஜக தாக் கல் செய்த பட்ஜெட் ஒரு பெரிய ஏமாற்று வேலை. சம தர்மம் என்ற சமாஜ்வத்தான் ராம ராஜ்ஜியம். சமதர்மம் இல் லாமல் ராம ராஜ்ஜியம் வர முடி யாது” என அவர் கூறினார்.
மறைந்த முன்னாள் முதல்வரும், சமாஜ்வாதி நிறு வனருமான முலாயம் சிங்கின் சகோதரர்தான் சிவ்பால் சிங் ஆவார். தற்போது எம்எல்ஏ வாக உள்ள சிவ்பால் சிங் சமாஜ்வாதியின் மாநில தலை வராக உள்ளார் என்பது குறிப் பிடத்தக்கது.