பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவரும், உத்தரப் பிரதேச மாநிலத்தின் முன்னாள் முதல்வரு மான மாயாவதி, சமீபத்தில் தனது அரசியல் வாரிசாக கட்சியின் மூத்த தலைவரும், மாயாவதி யின் சகோதரருமான ஆனந்த் குமாரின் மகன் ஆகாஷ் ஆனந்த் என்பவரை அறிவித்திருந்தார். இதைத் தொடர்ந்து பகுஜன் சமாஜ் கட்சியின் பல் வேறு நிகழ்வுகளிலும் மாயாவதிக்கு கொடுக்கப்படு வது போலவே ஆகாஷ் ஆனந்திற்கு முக்கியத்து வம் வழங்கப்பட்டு வருகிறது. இந் நிலையில், பாஜக விற்கு எதிராக பேசியதால் செவ்வாயன்று, “ஆகாஷ் ஆனந்துக்கு அனுபவம் போதாது என்பதால் அவரை தற்காலிகமாக அந்த பொறுப்பில் இருந்து விலக்கி வைக்கிறேன்” என மாயாவதி தனது டுவிட்டர் எக்ஸ் பக்கத்தில் அறிவித்தார்.
பாஜகவிற்கு எதிரான பேச்சு
கடந்த ஏப்ரல் 27 அன்று உத்தரப்பிரதேச மாநிலம் அம்பேத்கர் நகரில் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில், கடந்த 10 வருடங்களில் பாஜகவால் நாட்டு மக்கள் மோசமான நிலையில் இருக்கிறார்கள் என்று கூறி னார். இதே போல கடந்த ஏப்ரல் 29 அன்று சீதா பூரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில், “பாஜக அரசு புல்டோசர்களின் அரசு அல்ல, பயங்கரவாதிகளின் அரசு. மக்களை அடிமைப் படுத்தியுள்ளது. அப்படிப்பட்ட ஆட்சிக்கு முடிவு கட்ட வேண்டிய நேரம் வந்துவிட்டது” என்று கூறி னார். இவ்வாறு பல்வேறு தேர்தல் பிரச்சாரக் கூட் டத்தில் பாஜகவை கடுமையாக விமர்சித்தார். மாயா வதியின் அரசியல் வாரிசு ஆகாஷ் ஆனந்த். பாஜக விற்கு எதிராக பேசியதன் காரணமாகவே ஆகாஷ் ஆனந்திற்கு அனுபவம் இல்லை என்று கூறி கட்சி யில் இருந்து தற்போது ஓரங்கட்டப்பட்டுள்ளார்.
பாஜகவுடனான நட்பால் தனி மரமாகியுள்ள மாயாவதி
நாட்டை பாதுகாக்க “இந்தியா” கூட்டணியில் இணையுமாறு பகுஜன் சமாஜ் மூத்த மற்றும் முக்கி யத் தலைவர்கள் பலர் மாயாவதி யிடம் கோரிக்கை விடுத்தனர். ஆனால் மாயாவதி இதனை கண்டு கொள்ளாததால் பகுஜன் சமாஜ் கட்சி யின் மிக முக்கியத் தலைவரான டேனிஷ் அலி உள்ளிட்ட 14க்கும் மேற்பட்ட மூத்த தலைவர்கள் காங்கி ரஸ், சமாஜ்வாதி உள்ளிட்ட கட்சி களில் இணைந்து பாஜகவிற்கு எதி ரான போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர். மூத்த தலை வர்கள் வெளியேறி ஏற்கெனவே கட்சி ஆட்டம் கண்டு வரும் சூழ லில், தனக்கு பக்கபலமாக இருந்த ஆகாஷ் ஆனந்தையும் பாஜக விற்காக கட்சியை விட்டு ஓரங்கட்டி யதால் மாயாவதி தனி மரமாகியுள் ளார்.