லக்னோ, செப்.1- இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பில் இருந்த 18 சாதிகளை, எஸ்.சி. பட்டியலில்சேர்த்த உ.பி. அரசின் அறிவிக்கையை அலகா பாத் உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. கடந்த 2016-ஆம் ஆண்டு உத்தரப் பிரதேசத்தில் அகிலேஷ் தலைமையிலான சமாஜ்வாதி அரசு, மஜ்வார், கஷ்யப், மல்லா உள்ளிட்ட ஓபிசி வகுப்பைச் சோ்ந்த 18 சாதிகளை, பட்டியல் வகுப்பில் Scheduled Caste - SC) சேர்த்தது. எனினும் அவர்களுக்கு பட்டியல் வகுப்பினருக்கு உரிய சான்றிதழ்கள் வழங்க அலகாபாத் உயர்நீதிமன்றம் 2017-ஆம் ஆண்டு தடை விதித்தது. இதனிடையே, 18 சாதியினரையும் பட்டி யல் வகுப்பினராக அடையாளப்படுத்தும் மற்றோர் அறிவிக்கையை 2019-ஆம் ஆண்டு ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசு வெளியிட்டது. இதற்கு எதிராக அலகாபாத் உயர்நீதி மன்றத்தில் பல்வேறு தரப்பினர் பொதுநல மனு தாக்கல் செய்தனர். இந்த மனுக்கள், உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி ராஜேஷ் பிண்டல், ஜே.ஜே.முனீர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, ‘பட்டியல் பிரிவில் மாற்றங் களை மேற்கொள்ளும் அதிகாரம் மாநில அர சுக்கு இல்லை. எனவே, ஓபிசி வகுப்பைச் சேர்ந்த 18 சாதியினரை பட்டியல் வகுப்பின ராக சேர்த்து உத்தரப்பிரதேச அரசு வெளி யிட்ட அறிவிக்கைகள் ரத்து செய்யப்படு கின்றன’ என்று நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ளனர்.