பாஜக ஆளும் உத்தரப்பிரதேச மாநிலம் ஹாத்ரஸ் மாவட்டத்தின் முகல்கடி கிராமத்தில் கடந்த ஜுலை 2 அன்று போலிச்சாமியார் போலே பாபா பங்கேற்ற இந்துமத ஆன்மீக சொற்பொழிவுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், போலே பாபாவின் காலடி மண்ணை எடுக்க முயன்ற பொழுது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 112 பெண்கள் உட்பட 123 பேர் உயிரிழந்தனர். உலகளவில் முக்கிய செய்தியாக வலம் வந்த ஹாத்ரஸ் சம்பவம் தொடர்பாக பலர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், 123 பேர் உயிரிழப்புக்குக் காரண மான போலிச்சாமியார் போலே பாபா மீது சாதாரண எப்ஐஆர் கூட பதிவு செய்யப்படவில்லை.
இந்நிலையில், ஹாத்ரஸ் நெரிசல் சம்பவம் நடைபெற்ற நாள் முதல் தலைமறைவாக இருந்த போலிச்சாமியார் போலே பாபா வியாழனன்று உத்தரப்பிரதேசத்தின் காஸ்கஞ்ச் பகுதியில் பிடிஐசெய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில்,”ஹாத்ரஸ் நெரிசல் சம்பவத்தால் நான் மன உளைச்சலுக்கு ஆளானேன். அனைவரும் ஒரு நாள் இறக்க நேரிடும் என்பதால், விதியை யாராலும் மாற்ற முடியாது. இந்த நெரிசல் சம்பவம் நடைபெற்ற போது சுமார் 15 -16 பேர் முகத்தை மூடிய படி கூட்டத்தில் இருந்தனர். அவர்கள் நச்சு வாயுவை கூட்டத்தில் தெளித்துவிட்டு காரில் தப்பிச் சென்றனர் என எனது வழக்கறிஞர் கூறியது முற்றிலும் உண்மை. அவர் கூறியது போல் கண்டிப்பாக சதி நடந்துள்ளது. சனாதனம், சத்தியத்தின் அடிப்படையில் செயல்படும் எனது அமைப்பை சிலர் அவதூறு செய்ய முயற்சிக்கின்றனர். உண்மை வெளிவரும் மற்றும் சதி அம்பலப்படுத்தப்படும். நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர்க்கு நாங்கள் துணை நிற்கிறோம்” எனக் கூறினார்.
மத வன்முறையை கிளப்ப திட்டம்?
சமீபத்தில் நிறைவுபெற்ற மக்க ளவை தேர்தலில் உத்தரப்பிர தேச மாநிலத்தில் பாஜக பலத்த அடி வாங்கியது. சமாஜ்வாதி தலைமை யிலான “இந்தியா” கூட்டணி 44 இடங்களை கைப்பற்றிய நிலையில், பாஜக வெறும் 36 இடங்களில் சுருண்டது. மக்களவைத் தேர்தல் தோல்வியை மறைக்கவும், ஹாத்ரஸ் சம்பவத்தை மறைக்கவும் போலிச்சாமியார் போலே பாபா மூலம் வகுப்புவாத வன்முறையை கிளப்பும் முயற்சியில் பாஜக உள் ளிட்ட இந்துத்துவா கும்பல் தீவிர மாக இறங்கியுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. ஹாத்ரஸ் கூட்ட நெரிசல் ஏற்பட்ட இடத்தில் 15 பேர் நச்சு வாயுவை தெளித்துவிட்டு காரில் தப்பிச் சென்றனர் என போலே பாபா கூறியுள்ளார். கூட்ட நெரிசல் சம்பவத்தை திசை திருப்பும் நோக்கத்திலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளது அம்பலமாகியுள்ளது.