states

img

ராஜஸ்தானில் சிபிஐ(எம்) பிரம்மாண்ட மாநாடு

ராஜஸ்தான் மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலை முன்னிட்டு ஆதரவு திரட்டும் வகையில் கங்காநகர் மக்களவை தொகுதிக்கு உட்பட்ட ராய்சிங்நகர் (தனி) சட்டமன்ற தொகுதியில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பிரமாண்ட தொழிலாளர்கள் மாநாடு நடைபெற்றது. ராய்சிங்நகர் சட்டமன்றத் தொகுதியில் உள்ள 274 பூத்களில் பணியாற்றவுள்ள கட்சித் தோழர்கள், தொழிலாளர்கள் என பல்வேறு தரப்பினர் திரளாக பங்கேற்ற இந்த மாநாட்டில் கட்சியின் மாநிலச் செயலாளர் சியோபத் ராம், பத்ரா தொகுதியின் சிபிஐ(எம்) எம்எல்ஏ பல்வான் புனியா, முன்னாள் சிபிஐ(எம்) எம்எல்ஏ ஹெத்ராம் பெனிவால், விவசாய சங்க மாவட்ட தலைவர்கள் குர்சரன் சிங் மோர், கலுராம் தோரி ஆகியோர் உரையாற்றினர்.